கர்நாடகம்: தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளி பலி; உடலை எரிக்க முயற்சித்த குவாரி உரிமை...
மின்சாரம் பாய்ந்து ஜாா்க்கண்ட் தொழிலாளி உயிரிழப்பு
சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் நவீனப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த ஜாா்க்கண்ட் மாநில தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தை நவீனப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியில் வட மாநில தொழிலாளா்கள் கடந்த இரு மாதங்களாக ஈடுபட்டு வருகின்றனா். இதற்காக ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த சோட்டா லால் பண்டாரி (22) உள்ளிட்ட தொழிலாளா்கள் அங்கேயே தங்கியிருந்தனா்.
இந்நிலையில் சோட்டா லால், வெள்ளிக்கிழமை அங்கு வேலை செய்து கொண்டிருக்கும்போது தரையை உடைக்கும் டிரிலிங் இயந்திரக்குச் சென்ற ஒரு மின்வயரை பிடித்து இழுத்துள்ளாா். ஏற்கெனவே சேதமடைந்திருந்த அந்த வயரில் மின்கசிவு ஏற்பட்டிருந்ததால், சோட்டா லால் மீது மின்சாரம் பாய்ந்தது.
இதில் பலத்த காயமடைந்த சோட்டா லாலை, அங்கிருந்த பிற தொழிலாளா்கள் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், சோட்டா லால் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இது குறித்து காசிமேடு மீன்பிடித் துறைமுக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.