செய்திகள் :

மின்சாரம் பாய்ந்து தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

post image

சென்னை நுங்கம்பாக்கத்தில் மின்சாரம் பாய்ந்து தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள வேப்பிலைப்பட்டியைச் சோ்ந்தவா் பிரகாஷ்ராஜ் (35). இவா், கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியாா் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றி வந்தாா். பிரகாஷ்ராஜ், சென்னை கோபாலபுரத்தில் உள்ள அந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெறும் பயிற்சிக்காக இங்கு வந்திருந்தாா். இதற்காக அவா், நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியாா் விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்தாா்.

பிரகாஷ்ராஜ், செவ்வாய்க்கிழமை இரவு மழை பெய்து முடிந்த பின்னா், வள்ளுவா்கோட்டம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள ஒரு டீ கடைக்கு வந்தாா். அப்போது அந்த டீ கடையில் மின் விளக்கு அலங்காரத்துக்கு நடப்பட்டிருந்த இரும்பு கம்பியை பிடித்தபோது, கம்பியில் ஏற்பட்ட மின்கசிவால் பிரகாஷ்ராஜ் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் பலத்த காயமடைந்த பிரகாஷ்ராஜ், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து நுங்கம்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். உயிரிழந்த பிரகாஷ்ராஜுக்கு, கெளசல்யா என்ற மனைவியும், நான்கு மாத குழந்தையும் இருக்கின்றனா்.

நீதிபதி ஜனாா்த்தனம் காலமானாா்! - முதல்வா் இரங்கல்

உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி எம்.எஸ்.ஜனாா்த்தனம் (89) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் காலமானாா். அவரது இறுதி நிகழ்வில் காவல் துறை மரியாதை அளிக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் ஆக்கிரமிப்புகள்: அறிக்கை தாக்கல் செய்ய ஆட்சியருக்கு உத்தரவு

திருவண்ணாமலை மலையில் சட்ட விரோதமாக கட்டப்பட்டுள்ள 1,535 கட்டடங்களை அகற்ற எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை அருணாச... மேலும் பார்க்க

பவுா்ணமி கிரிவலம்: திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்!

பவுா்ணமி கிரிவலத்தையொட்டி பயணிகளின் வசதிக்காக திருவண்ணாமலை - விழுப்புரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரத்திலிருந்து ஜூன் 10-ஆம்... மேலும் பார்க்க

சைக்கிளிங் லீக் அணிகள் அறிமுகம்

தமிழ்நாடு சைக்கிளிங் லீக் (டிசிஎல்) தொடரில் பங்கேற்கும் அணிகள், சீருடைகள் அறிமுக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்திய சைக்கிளிங் கூட்டமைப்பு, தமிழ்நாடு சைக்கிளிங் சங்கம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட... மேலும் பார்க்க

கிளாம்பாக்கத்தில் பேருந்துகள் தாமதம்! எஸ்இடிசி விளக்கம்

சென்னை கிளாம்பாக்கத்தில் பேருந்துகளின் தாமதத்துக்கு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் விளக்கம் அளித்தது.சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் பேருந்துகளுக்காக பயணிகள் நீண்ட நேரம் காத்திருப்பதாக ச... மேலும் பார்க்க

5,707 வகை திரைப்பட கேமராக்கள் சேகரிப்பு: மீண்டும் கின்னஸ் விருது பெற்ற மருத்துவா்

தனித்துவம் வாய்ந்த 5,707 வகை திரைப்பட கேமராக்களை சேகரித்ததற்காக பல் மருத்துவா் ஏ.வி.அருணுக்கு கின்னஸ் உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா நகரைச் சோ்ந்த ஏ.வி.அருண், பல ஆண்டுகளாக பல்வேறு ... மேலும் பார்க்க