செய்திகள் :

மின்சார வாகனங்களுக்கு அதிக மானியம்: ஒடிசா அரசின் புதிய திட்டம்!

post image

மின்சார வாகனங்களுக்கு அதிக மானியம் வழங்க ஒடிசா அரசு முடிவு செய்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அரசு தனது புதிய வரைவு மின்சார வாகனக் கொள்கை - 2025இன் கீழ் இந்தி விதியை இணைத்துள்ளது. இது சம்பந்தப்பட்ட பங்குதாரர்களிடமிருந்து கருத்துகள் மற்றும் பரிந்துரைகளைப் பெற்ற பிறகு ஐந்தாண்டுகளுக்குச் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.

வரைவுக் கொள்கையின்படி, ஒடிசாவில் மின்சார இருசக்கர வாகனப் பதிவுக்கு ஒரு கிலோவாட் பேட்டரி திறனுக்கு ரூ. 5 ஆயிரம் என்ற விகிதத்தில், அதிகபட்சமாக ரூ. 30 ஆயிரம் வரை அரசு மானியம் வழங்க உள்ளது.

முன்னதாக மின்சார வாகனங்களுக்கு அதிகபட்ச மானியத்தொகை ரூ. 20 ஆயிரமாக இருந்தது.

அதிக பேட்டரி திறன் கொண்டு மின்சார ஸ்கூட்டர்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் தற்போது அதற்கேற்ப மானியத் தொகையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.

இருசக்கர வாகனங்களைத் தவிர, பேட்டரியில் இயங்கும் மூன்று சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், டாக்சிக்கள், லாரிகள் மற்றும் பேருந்துகளுக்கும் அரசு மானியங்களை வழங்குகிறது.

2030 வரை அமலில் இருக்கும் கொள்கையின் கீழ், நான்கு சக்கர இலகுரக மோட்டர் வாகனங்கள் அல்லது டாக்சிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் ரூ. 1.5 லட்சத்திலிருந்து ரூ. 2 லட்சமாக உயர்த்தும் என்று போக்குவரத்து அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் 3.5 டன்களுக்கு மேல் எடையுள்ள வாகனங்களுக்கும் 7 டன்னுக்கு குறைவான எடையுள்ள வாகனங்களுக்கு ரூ. 5 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும். அதேபோன்று 12 டன் முதல் 18.5 வரையிலான வாகனங்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படும். மேலும் ஒடிசாவில் நிரந்தரமாக வசிக்கும் தனிநபர்களுக்கும் மின்சார வாகன சலுகைகள் வழங்கப்படும்.

மின்சார வாகனத் துறையை மேம்படுத்துவதற்காக அரசு புதிய கொள்கையைச் செயல்படுத்த முடிவு செய்துள்ளது. முன்மொழியப்பட்ட கொள்கையின் கீழ், 2030 ஆம் ஆண்டிற்குள் புதிய பதிவுகளில் 50 சதவிகிதம் மின்சார வாகனங்களை உருவாக்க வேண்டும் என்று அரசு இலக்கு வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

The Odisha government has decided to enhance the subsidy provided for registration of electric two-wheelers from the existing Rs 20,000 to Rs 30,000 to boost the segment, an official said on Thursday.

உத்தரகண்ட் பேரிடருக்கு ரூ.1,200 கோடி நிவாரணம்! பிரதமர் மோடி அறிவிப்பு!

உத்தரகண்ட் மாநிலத்துக்கு, பேரிடர் பாதிப்புகளைச் சரிசெய்ய நிவாரண நிதியாக ரூ.1,200 கோடி வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். உத்தரகண்டில் பருவமழையின் தீவிரத்தால், மேகவெடிப்பு, கனமழை... மேலும் பார்க்க

மணிப்பூர்: பிரதமர் வருகையின்போது பாஜக நிர்வாகிகள் 43 பேர் ராஜிநாமா ஏன்?

மணிப்பூரில் 40-க்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் ராஜிநாமா செய்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.பிரதமர் நரேந்திர மோடி, இந்த வார இறுதியில் மணிப்பூர் செல்லவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், மணிப்பூரில... மேலும் பார்க்க

சாலைகளைச் சீரமைக்கும் வரை சுங்கக் கட்டண வசூல் இல்லை! - தடையை நீட்டித்த கேரள உயர்நீதிமன்றம்

தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்கும் வரை பளியக்கரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்கக் கூடாது என சுங்கக் கட்டண வசூல் தடையை செப். 15 வரை நீட்டித்துள்ளது கேரள உயர்நீதிமன்றம். கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்த... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவரின் 14 கேள்விகள்: தீர்ப்பு ஒத்திவைப்பு!

மசோதாக்கள் மீது முடிவெடுக்க காலக்கெடு விதித்த தீர்ப்பு மீது, குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகள் தொடர்பான வழக்கின் தீர்ப்பு, தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.சட்டப் பேரவைகளில் நிறைவேற... மேலும் பார்க்க

ரேபரேலியில் மாவட்ட வளர்ச்சி கூட்டம்: ராகுல் காந்தி தலைமை தாங்கினார்!

காங்கிரஸ் எம்.பி.யும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். ராகுல் காந்தி தனது நாடாளுமன்றத் தொகு... மேலும் பார்க்க

ஆம் ஆத்மி எம்பியை சந்திக்க முயன்ற முன்னாள் முதல்வர்! தடுத்து நிறுத்திய காவல் துறை!

ஜம்மு - காஷ்மீரில், போராட்டத்தில் ஈடுபட்ட ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரைச் சந்திக்க முயன்ற முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவை காவல் துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். ஜம்மு - காஷ்மீரின்... மேலும் பார்க்க