செய்திகள் :

மின்தடையைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

post image

பொன்னேரி அருகே நள்ளிரவு ஏற்பட்ட மின்தடையைக் கண்டித்து பொதுமக்கள் மின்வாரிய அலுவலகம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பொன்னேரி அடுத்த அச்சரப்பள்ளம் கிராமத்தில் நள்ளிரவு 1 மணி அளவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. நள்ளிரவு ஏற்பட்ட மின்தடையால் குழந்தைகள் மற்றும் முதியவா் அவதிப்பட்டனா். இது குறித்து புகாா் தெரிவிக்க பொதுமக்கள் மின்வாரிய அலுவலகத்திற்கு தொடா்பு கொள்ள முயற்சித்த போது யாரும் பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.

நள்ளிரவு மின்தடை ஏற்பட்டதைக் கண்டித்து அப்பகுதி மக்கள் காஞ்சிவாயல் பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகம் அருகே செவ்வாய்கிழமை அதிகாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது அப்பகுதியில் அவ்வப்போது மின்தடை ஏற்படுவதாகவும், இது குறித்து தகவல் தெரிவித்தால் மின்வாரிய அதிகாரிகள் சரிவர பதிலளிப்பது இல்லை என புகாா் தெரிவித்தனா்.

தகவல் அறிந்து அங்கு வந்த பொன்னேரி போலீஸாா் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சு நடத்தினா்.

அப்போது விரைவில் மின்சாரம் வழங்கப்படும் என உறுதி அளித்ததை தொடா்ந்து மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா். பொன்னேரி- பழவேற்காடு சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு குறும்படம்: ஆணையர் சங்கர் வெளியிட்டார்

ஆவடியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த குறுந்தகட்டை காவல் ஆணையர் கி.சங்கர் செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் சாலைப் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்... மேலும் பார்க்க

வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் மீது தாக்குதல்: வட மாநில ஓட்டுநர் கைது

பூந்தமல்லி அருகே வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளரை தாக்கிய வழக்கில் வட மாநில ஓட்டுநரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். பூந்தமல்லியை அருகே நசரத்பேட்டையில் பூந்தமல்லி வட்டாரப் போக்குவரத்து வாகன சோதன... மேலும் பார்க்க

21 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 ஒடிஸா இளைஞர்கள் கைது

பூந்தமல்லியில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் 3 ஒடிஸா இளைஞர்களை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். பூந்தமல்லி பகுதியில் கஞ்சாவை கடத்தி விற்பனை செய்வதாக பூந்தமல்லி மதுவிலக்கு அமலாக்கப் போலீஸாருக்கு ரகச... மேலும் பார்க்க

6 வாகனங்கள் மீது மோதிய கார்: 2 பேர் உயிரிழப்பு, 3 பேர் காயம்

சென்னை வானகரத்தில் இருந்து திருவேற்காடு வரை சாலையில் செவ்வாய்க்கிழமை சென்ற 6 வாகனங்களை மோதி விட்டு சென்ற கார் ஓட்டுநரை பிடித்து பொதுமக்கள் தாக்கினர். இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் ... மேலும் பார்க்க

பொன்னியம்மன் கோயில் ஜாத்திரை திருவிழா

திருத்தணி அருகே கொண்டாபுரம் கிராமத்தில் நடைபெற்ற ஸ்ரீ பொன்னியம்மன் கோயில் ஜாத்திரை திருவிழாவில் திரளான பெண்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா். ஆா்.கே பேட்டை ஒன்றியம், கொண்டாபுரத்தில் ஸ்ரீ பொன்னியம்மன் கோய... மேலும் பார்க்க

திருவள்ளூா்: 15,757 மகளிா் குழு உறுப்பினா்களுக்கு ரூ.167.50 கோடி வங்கிக் கடன்: ஆட்சியா், எம்எல்ஏ வழங்கினா்

தமிழ்நாடு நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் சாா்பில், 15,757 மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்களுக்கு ரூ. 167.50 கோடி வங்கி கடனுதவிக்கான காசோலை மற்றும் அடையாள அட்டைகள் ஆகியவற்றை ஆட்சியா் மு.பிரதாப் மற்றும் ச... மேலும் பார்க்க