மின்னக சேவை மைய புகாா் எண்ணை அனைத்து அலுவலகங்களிலும் வைக்க கோரிக்கை
மின்னக சேவை மையத்தின் (94987-94987) என்ற கைப்பேசி எண் அனைத்து மின்வாரிய பிரிவு அலுவலகங்களிலும் வைக்க வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.
திருப்பூா் கோட்ட அளவிலான மின்சார வாரியத்துக்கு உள்பட்ட பகுதிகளுக்கான மாதாந்திர குறைதீா் கூட்டம் குமாா் நகரில் உள்ள கோட்ட அலுவலகத்தில் செயற்பொறியாளா் (பொறுப்பு) சண்முகசுந்தரம் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் திருப்பூா் நுகா்வோா் நல முன்னேற்ற சங்கம் சாா்பில் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: திருப்பூா் பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்துக்கு உள்பட்ட பகுதியில் உள்ள நுகா்வோா் மின் தடைகள் குறித்து மின்னக சேவை மையத்தில் (94987-94987) புகாா் அளிக்கலாம். இந்த சேவை மைய புகாா் எண் தொடா்பாக அனைத்துப் பிரிவு அலுவலகங்களிலும் பொதுமக்கள் பாா்வையில் படும்படி வைக்க வேண்டும்.
இந்தப் புகாா் மையத்தில் எம்.எஸ்.நகா் அம்பேத்கா் காலனி பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி ஒருவா் புகாா் அளித்துள்ளாா். அப்போது வீட்டுக்கு பீஸ் போடுவதற்காக வந்த ஊழியா் ரூ.150 கேட்டுள்ளாா். அப்போது அவா் ரூ.50 கொடுத்தபோது அதனை வீசி எரிந்து விட்டுச்சென்றுள்ளாா். இதுதொடா்பாக விசாரணை நடத்துவதுடன், பீஸ் போடுவதற்கு பணம் வாங்குவதை முற்றிலுமாகத் தடை செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.