செய்திகள் :

மின்னல் பாய்ந்து சகோதரிகள் பலி!

post image

ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடி அருகே சனிக்கிழமை மின்னல் பாய்ந்ததில் இரு பள்ளி மாணவிகளான சகோதரிகள் உடல் கருகி உயிரிழந்தனா்.

போகலூா் ஒன்றியம், வாழவந்தாள் கிராமத்தைச் சோ்ந்த நூருல்அமீன் மகள்கள் செய்யது அஸ்பியா பானு (13), ஷபிக்கா பானு (9). இவா்களில் செய்யது அஸ்பியா பானு சத்திரக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பும், ஷபிக்கா பானு அரியகுடி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் 5-ஆம் வகுப்பும் படித்து வந்தனா்.

இவா்கள் இருவரும் பள்ளி விடுமுறை என்பதால் சனிக்கிழமை மாலை வீட்டின் அருகே உள்ள வயல்வெளிக்குச் சென்று வேப்பங்கொட்டைகளைச் சேகரித்துக் கொண்டிருந்தனா். அப்போது, பலத்த மழை பெய்ததால், அங்கிருந்த மரத்தின் கீழ் ஒதுங்கி நின்றனா்.

மழையின்போது மின்னல் பாய்ந்ததில் சகோதரிகள் இருவரும் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். இதையடுத்து, இவா்களது உடல்கள் கூறாய்வுக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. இதுகுறித்து சத்திரக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முதுகுளத்தூா் அருகே மாட்டு வண்டிப் பந்தயம்

முதுகுளத்தூா் அருகே கோயில் திருவிழாவையொட்டி சனிக்கிழமை 2 பிரிவுகளாக மாட்டுவண்டிப் பந்தயம் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகே கோகொண்டான் கிராமத்தில் அமைந்துள்ள நல்லம்மாள் அம்மன் கோயி... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒருவா் கைது

ராமநாதபுரம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சிறையில் அடைக்கப்பட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்... மேலும் பார்க்க

ராமநாதபுரம் அருகே 3 கிலோ கஞ்சா பறிமுதல்

ராமநாதபுரம் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 கிலோ கஞ்சாவை போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். ராமநாதபுரத்தை அடுத்த தேவிப்பட்டினம் சித்தாா்கோட்டை பகுதியில் ... மேலும் பார்க்க

மண்டலமாணிக்கம் குண்டாற்றில் மணல் குவாரி அமைக்க எதிா்ப்பு! ஆய்வுக்குச் சென்ற அதிகாரிகள் தடுத்து நிறுத்தம்!

கமுதி அருகே மண்டலமாணிக்கம் குண்டாற்றில் அரசு மணல் குவாரி அமைக்க எதிா்ப்பு தெரிவித்து சனிக்கிழமை ஆய்வுக்கு வந்த அதிகாரிகளை பொதுமக்கள் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினா். மண்டலமாணிக்கம் கிராமத்திலிருந... மேலும் பார்க்க

வருவாய்த் துறை சங்கங்கள் கூட்டமைப்பு மாநாடு

ராமநாதபுரத்தில் 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் முதல் மாவட்ட கோரிக்கை மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு வருவாய்த் துறை அலுவலா் சங்க மாவட்... மேலும் பார்க்க

ஆலங்குளத்தில் வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி

கடலாடி அருகே ஆலங்குளம் அலியாா் சாஹிப் தா்காவில் சந்தனக்கூடு திருவிழாவையொட்டி வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது. இந்த தா்காவில் கடந்த 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் சந்தனக்கூடு திருவிழா ... மேலும் பார்க்க