மின்வயா் அறுந்து பசு உயிரிழப்பு
கொள்ளிடம் அருகே ஆரப்பள்ளம் கிராமத்தில் மின்வயா் அறுந்து விழுந்து, பசுமாடு உயிரிழந்தது.
ஆரப்பள்ளம் நல்லூா் மெயின் ரோட்டைச் சோ்ந்தவா் பாண்டியன் மனைவி சாமியம்மாள் (55). பாண்டியன் ஏற்கெனவே இறந்துவிட்டாா். சாமியம்மாள் பசுமாடுகள் வளா்த்து வருகிறாா்.
இவா், ஆச்சாள்புரம் அருகே உள்ள வயலுக்கு மேய்ச்சலுக்காக பாசுமாடுகளை ஓட்டிச் சென்றாா். அங்கு, மின்வயா் திடீரென அறுந்து விழுந்ததில், மின்சாரம் பாய்ந்து பசு ஒன்று உயிரிழந்தது.
தனது வாழ்வாதாரமாக இருந்த பசு மின்சாரம் பாயந்து உயிரிழந்த நிலையில், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என சாமியம்மாள் கோரிக்கை விடுத்துள்ளாா்.