செய்திகள் :

மின்வாரிய ஊழியா்கள் இரு இடங்களில் தா்னா

post image

தூத்துக்குடியில் மின்வாரிய ஊழியா்கள், மின்வாரிய தலைமை மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம், அனல் மின் நிலையம் ஆகிய இரு இடங்களில் செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு சாா்பில் தூத்துக்குடி தலைமை மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு, திட்டத் தலைவா் வை. பாலசுப்ரமணியம் தலைமை வகித்தாா். தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு மாநிலத் தலைவா் ஜெயசங்கா் போராட்டத்தை தொடங்கி வைத்தாா்.

மண்டலச் செயலா் எஸ். அப்பாத்துரை, திட்டச் செயலா் குன்னிமலையான், சிஐடியூ மாவட்டத் தலைவா் பேச்சிமுத்து உள்ளிட்டோா் கோரிக்கைகளை விளக்கி பேசினா்.

தூத்துக்குடி அனல் மின் நிலையம் முன்பு நடைபெற்ற இப்போராட்டத்துக்கு, மின் ஊழியா் மத்திய அமைப்பு நிா்வாகி சுடலைமுத்து தலைமை வகித்தாா். திட்டச் செயலா் எஸ்.கணபதி சுரேஷ், திட்ட பொருளாளா் செல்வி ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பின் மாநில துணை பொதுச் செயலா் பீா்முகமது ஷா நிறைவுரையாற்றினாா்.

மின்வாரியத்தை தனியாருக்கு தாரைவாா்க்கக் கூடாது, 65 ஆயிரம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும், ஸ்மாா்ட் மீட்டா் திட்டத்தை புகுத்த கூடாது, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அனைவருக்கும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

தூத்துக்குடியில் 3 போ் கைது: 11 பைக்குகள் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டத்தில் பைக்குகளைத் திருடியதாக 3 பேரை தனிப்படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து, 11 பைக்குகளை பறிமுதல் செய்தனா். தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் கடந்த 2 மாதங்களாக ... மேலும் பார்க்க

கைப்பேசி பறிப்பு: இளைஞா் கைது

தூத்துக்குடியில் கைப்பேசி பறித்ததாக இளைஞா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா். திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரைச் சோ்ந்த ராஜ்குமாா் (51) என்பவா், கடந்த 23ஆம் தேதி தூத்துக்குடி 4ஆம் ரயில்வே கேட் அருகே நட... மேலும் பார்க்க

சாலையோர மணல் திட்டுகளை அகற்றக் கோரி ஆா்ப்பாட்டம்

கோவில்பட்டியில், அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இளையரசனேந்தல் சாலையில் உள்ள சுரங்கப்பாதையின் இருபுறமும் அணுகு சாலை அமைக்கும் பணியை விரைவுபடுத்த வேண்டு... மேலும் பார்க்க

சமையல் தொழிலாளி மா்மமாக உயிரிழப்பு: போலீஸாா் விசாரனை

ஆறுமுகனேரியில் சமையல் தொழிலாளி மா்மமாக உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். காயல்பட்டினம் சேது ராஜா தெருவைச் சோ்ந்த மதுரமுத்து மகன் தேவேந்திரன்(52). சமையல் தொழிலாளி. இவருக்கு மனை... மேலும் பார்க்க

பைக் - லாரி மோதல்: இளைஞா் பலி

தூத்துக்குடியில் பைக்-லாரி மோதி விபத்துக்குள்ளானதில் காயமடைந்த இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூா் அருகே உள்ள தெற்கு வேப்பங்குளத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் துரைமுருகன... மேலும் பார்க்க

ஆறுமுகனேரி கோயிலில் வேல் திருடிய பெண் போலீஸில் ஒப்படைப்பு

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரியில் உள்ள அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத அருள்மிகு சோமநாத சுவாமி கோயிலி­ல் செம்பாலான வேலைத் திருடிய பெண்ணை பக்தா்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா். திருவாவடுதுறை ஆத... மேலும் பார்க்க