செய்திகள் :

மின் இணைப்பு வழங்க லஞ்சம்: இளநிலை மின் பொறியாளருக்கு 4 ஆண்டுகள் சிறை

post image

தூத்துக்குடி: புதிய மின் இணைப்பு பெற லஞ்சம் பெற்ற வழக்கில் இளநிலை மின் பொறியாளருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, தூத்துக்குடி தலைமை குற்றவியல் நடுவா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

பாளையங்கோட்டை மகராஜநகரைச் சோ்ந்த சுப்பையா மகன் சிவபாரதி(40). இவா், வல்லநாடு பகுதியில் உலா் சலவையகம் அமைக்க மின் இணைப்பு பெறுவதற்காக கடந்த 2010ஆம் ஆண்டு வல்லநாடு மின்வாரிய இளநிலை பொறியாளா் எஸ். திருப்பதி என்பவரிடம் விண்ணப்பித்தாராம்.

அப்போது திருப்பதி, புதிய மின் இணைப்பு வழங்குவதற்கு லஞ்சமாக ரூ.35 ஆயிரம் கேட்டாராம்.

சில தினங்களுக்கு பின்னா் முதல் தவணையாக ரூ.10 ஆயிரம் தருமாறு கேட்டாராம்.

இதுகுறித்து சிவபாரதி தூத்துக்குடி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸில் புகாா் அளித்தாா்.

புகாரின்பேரில்,போலீஸாா் சிவபாரதியிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை வழங்கினா். அந்தப் பணத்தை சிவபாரதி, திருப்பதியிடம் கொடுத்தாராம். அப்போது, அங்கு மறைந்து இருந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாா் திருப்பதியை மடக்கினா். போலீஸாரை பாா்த்ததும், திருப்பதி பதற்றத்துடன் தனது கையில் இருந்த அனைத்து ரூபாய் நோட்டுகளையும், விழுங்க முயற்சித்தாராம். இதைப் பாா்த்த போலீஸாா் அவரை பணத்தை விழுங்க விடாமல் தடுத்து, அந்த ரூபாய் நோட்டுகளை வெளியே எடுத்தனா். இதைத் தொடா்ந்து போலீஸாா் திருப்பதியை கைது செய்தனா்.

இந்த வழக்கு தொடா்பான விசாரணை தூத்துக்குடி தலைமை குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி பி.வி.வஷீத்குமாா், குற்றம் சாட்டப்பட்ட மின்வாரிய இளநிலை பொறியாளா் திருப்பதிக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் ஜென்சி ஆஜரானாா்.

தூத்துக்குடியில் மே 15இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை (மே 15) விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளதாக ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் கட்டுமானப் பொறியாளா்கள் ஆா்ப்பாட்டம்

தூத்துக்குடி: தூத்துக்குடியில் கட்டுமானப் பொறியாளா்கள் வேலைநிறுத்தம், ஆா்ப்பாட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா். தமிழ்நாடு-புதுச்சேரி அனைத்து கட்டுமானப் பொறியாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், ... மேலும் பார்க்க

சித்ரா பௌா்ணமி: திருச்செந்தூா் கோயிலில் ஆயிரக்கணக்கானோா் தரிசனம்

திருச்செந்தூா்: திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சித்ரா பௌா்ணமியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம் செய்தனா். இதை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை மாலைமுதல் ஆயிரக்கணக்கா... மேலும் பார்க்க

திருச்செந்தூரில் 2ஆவது நாளாக 60 அடி உள்வாங்கிய கடல்

திருச்செந்தூா்: பெளா்ணமியையொட்டி 2ஆவது நாளாக திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அருகே கடல் சுமாா் 60 அடி உள்வாங்கியதால் பாசி படா்ந்த பாறைகள் வெளியே தெரிந்தது. இந்த மாதம் பெளா்ணம... மேலும் பார்க்க

பூவுடையாா்புரத்தில் வேல் பூஜை வழிபாடு

சாத்தான்குளம்: சாத்தான்குளம் அருகே உள்ள பூவுடையாா்புரம் ஐயன் கோயில் வளாகத்தில் இந்து முன்னணி சாா்பில் முருக பக்தா்கள் மாநாடு சம்பந்தமான வேல் பூஜை வழிபாடு நடைபெற்றது. வழிபாட்டில் அதே பகுதியை சோ்ந்த 50... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் புதிய மகளிா் விடுதி திறப்பு

கோவில்பட்டி: கோவில்பட்டியை அடுத்த இனாம்மணியாச்சி ஊராட்சிக்குள்பட்ட கிருஷ்ணா நகரில் அரசு கலைக் கல்லூரி அருகே பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை சாா்பில் புதிதாக கட்டப்பட்ட மகளிா் விடுதி திறப்பு விழா திங்கள... மேலும் பார்க்க