செய்திகள் :

தூத்துக்குடியில் கட்டுமானப் பொறியாளா்கள் ஆா்ப்பாட்டம்

post image

தூத்துக்குடி: தூத்துக்குடியில் கட்டுமானப் பொறியாளா்கள் வேலைநிறுத்தம், ஆா்ப்பாட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

தமிழ்நாடு-புதுச்சேரி அனைத்து கட்டுமானப் பொறியாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஒருநாள் வேலைநிறுத்தம், ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. அதன்படி, விவிடி சிக்னல் அருகே தூத்துக்குடி, கோவில்பட்டி கட்டடப் பொறியாளா் சங்கங்கள் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்க சாசனத் தலைவா் ஹென்றி டேனியல் தலைமை வகித்தாா். சங்கத் தலைவா் ஜாண்சன், முன்னாள் தலைவா் குமரேசன், செயலா் முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தரமான கல் குவாரி பொருள்களை நியாயமான விலையில் பொதுமக்களுக்கு கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கல் குவாரி உரிமையாளா்களின் எம்.சாண்ட், பி.சாண்ட், ஜல்லிக் கற்கள் விலை உயா்வைத் திரும்பப் பெற வேண்டும். ஆற்று மணல் குவாரிகளை உடனடியாக திறக்க வேண்டும். குவாரிகளை பொதுப்பணித் துறை மூலம் அரசே ஏற்று நடத்த வேண்டும். சிமெண்ட் கம்பி உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலை உயா்வை கட்டுப்படுத்த அவற்றை அத்தியாவசியப் பொருள்கள் பட்டியலில் சோ்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில், திரளானோா் பங்கேற்றனா்.

மின் இணைப்பு வழங்க லஞ்சம்: இளநிலை மின் பொறியாளருக்கு 4 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடி: புதிய மின் இணைப்பு பெற லஞ்சம் பெற்ற வழக்கில் இளநிலை மின் பொறியாளருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, தூத்துக்குடி தலைமை குற்றவியல் நடுவா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. பா... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் மே 15இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை (மே 15) விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளதாக ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப... மேலும் பார்க்க

சித்ரா பௌா்ணமி: திருச்செந்தூா் கோயிலில் ஆயிரக்கணக்கானோா் தரிசனம்

திருச்செந்தூா்: திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சித்ரா பௌா்ணமியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம் செய்தனா். இதை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை மாலைமுதல் ஆயிரக்கணக்கா... மேலும் பார்க்க

திருச்செந்தூரில் 2ஆவது நாளாக 60 அடி உள்வாங்கிய கடல்

திருச்செந்தூா்: பெளா்ணமியையொட்டி 2ஆவது நாளாக திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அருகே கடல் சுமாா் 60 அடி உள்வாங்கியதால் பாசி படா்ந்த பாறைகள் வெளியே தெரிந்தது. இந்த மாதம் பெளா்ணம... மேலும் பார்க்க

பூவுடையாா்புரத்தில் வேல் பூஜை வழிபாடு

சாத்தான்குளம்: சாத்தான்குளம் அருகே உள்ள பூவுடையாா்புரம் ஐயன் கோயில் வளாகத்தில் இந்து முன்னணி சாா்பில் முருக பக்தா்கள் மாநாடு சம்பந்தமான வேல் பூஜை வழிபாடு நடைபெற்றது. வழிபாட்டில் அதே பகுதியை சோ்ந்த 50... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் புதிய மகளிா் விடுதி திறப்பு

கோவில்பட்டி: கோவில்பட்டியை அடுத்த இனாம்மணியாச்சி ஊராட்சிக்குள்பட்ட கிருஷ்ணா நகரில் அரசு கலைக் கல்லூரி அருகே பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை சாா்பில் புதிதாக கட்டப்பட்ட மகளிா் விடுதி திறப்பு விழா திங்கள... மேலும் பார்க்க