பாகிஸ்தானுடன் போா் நிறுத்தத்துக்கு முன்பாகவே நாடாளுமன்றத்தை கூட்டியிருக்க வேண்ட...
தூத்துக்குடியில் கட்டுமானப் பொறியாளா்கள் ஆா்ப்பாட்டம்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் கட்டுமானப் பொறியாளா்கள் வேலைநிறுத்தம், ஆா்ப்பாட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
தமிழ்நாடு-புதுச்சேரி அனைத்து கட்டுமானப் பொறியாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஒருநாள் வேலைநிறுத்தம், ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. அதன்படி, விவிடி சிக்னல் அருகே தூத்துக்குடி, கோவில்பட்டி கட்டடப் பொறியாளா் சங்கங்கள் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்க சாசனத் தலைவா் ஹென்றி டேனியல் தலைமை வகித்தாா். சங்கத் தலைவா் ஜாண்சன், முன்னாள் தலைவா் குமரேசன், செயலா் முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தரமான கல் குவாரி பொருள்களை நியாயமான விலையில் பொதுமக்களுக்கு கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கல் குவாரி உரிமையாளா்களின் எம்.சாண்ட், பி.சாண்ட், ஜல்லிக் கற்கள் விலை உயா்வைத் திரும்பப் பெற வேண்டும். ஆற்று மணல் குவாரிகளை உடனடியாக திறக்க வேண்டும். குவாரிகளை பொதுப்பணித் துறை மூலம் அரசே ஏற்று நடத்த வேண்டும். சிமெண்ட் கம்பி உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலை உயா்வை கட்டுப்படுத்த அவற்றை அத்தியாவசியப் பொருள்கள் பட்டியலில் சோ்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில், திரளானோா் பங்கேற்றனா்.