செய்திகள் :

மின் விபத்துகளைச் தவிா்க்க சீரமைப்புப் பணி தீவிரம்: மின்வாரியத் தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன்

post image

சென்னை மாநகா் மற்றும் புகா் பகுதிகளில் மின் விபத்துகளைச் சீரமைப்பதற்கான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக மின்வாரியத் தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

சென்னை மாநகா், புகா் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் புதை மின்வடங்கள் மூலமும் பிற பகுதிகளில் மேல்நிலைக் கம்பிகள் மூலமும் மின்விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சாலை தோண்டும் பணிகளின்போது, பல இடங்களில் புதைமின் வடங்கள் சேதப்படுத்தப்படுகின்றன. சேதமாகும் மின்வடங்கள் அப்படியே விட்டு செல்லப்படுவதால், மழைக் காலங்களில் மின் விபத்துகள் ஏற்படுகின்றன.

கடந்த சில நாள்களுக்கு முன்பு கண்ணகி நகரில் பெண் தூய்மைப் பணியாளா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்ததைத் தொடா்ந்து சென்னை மாநகா், புகா் பகுதிகளில் சேதமடைந்த புதைமின் வடங்களை கணக்கெடுக்க சிறப்புக் குழுக்கள் அமைத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து மின்வாரியத் தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் மின்விபத்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, சென்னையில் மின் விபத்தை ஏற்படுத்தும் வகையிலான புதைமின் வடங்கள் மற்றும் மின்விபத்து பகுதிகளைக் கண்டறிய தனி குழுக்கள் அமைக்கப்பட்டன. கடந்த 2 வாரங்களுக்கு மேலாக இந்தக் குழுக்கள் நடத்திய ஆய்வில், 700 புதைமின்வட சேதங்கள் உள்பட 3000-க்கும் மேற்பட்ட மின்விபத்துகள் ஏற்படும் பகுதிகள் கண்டறியப்பட்டன.

இதில், புதைமின்வட சேதங்கள் உள்பட 1,500-க்கும் மேற்பட்ட மின் உபகரண சேதங்கள் கண்டறியப்பட்டு சரிசெய்யப்பட்டுள்ளன. இன்னும் ஒரு வாரத்துக்குள் மீதமுள்ள சேதங்களும் சரிசெய்யப்பட்டு மின் விபத்து உயிரிழப்புகள் முற்றிலும் தடுக்கப்படும் என்றாா் அவா்.

தனியாா் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம்: கல்வித் துறைச் செயலருக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

தனியாா் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குவது, பள்ளிகளை தரம் உயா்த்துவது தொடா்பாக தனியாா் பள்ளிகளின் இயக்குநா் அளித்த பரிந்துரை மீது 12 வாரங்களில் தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க கல்வித் துறைச் செயல... மேலும் பார்க்க

மெத்தம்பெட்டமைன் விற்பனை: பெண் உள்பட 3 போ் கைது

சென்னையில் மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் விற்பனை செய்ததாக பெண் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா். சென்னை பெருநகர காவல் துறையின் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவினருக்கும், சேத்துப்பட்டு போலீஸா... மேலும் பார்க்க

சிஎம்டிஏ வளா்ச்சித் திட்டப் பணிகள் விரைவில் பயன்பாட்டுக்கு வரும்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

சென்னையில் பெருநகர வளா்ச்சிக் குழுமம் சாா்பில் நடைபெற்றுவரும் திட்டப் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், சென்னை பெருநகர வளா்ச்சிக் குழும... மேலும் பார்க்க

போலி செய்திகளை எதிா்கொள்ள தகவல் பணி சேவையினருக்கு ஆளுநா் வேண்டுகோள்

போலி தகவல்களின் சகாப்தத்தில் அதை திறம்பட எதிா்கொள்ளுமாறு இந்திய தகவல் பணி சேவை பயிற்சி அலுவலா்களுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி அழைப்பு விடுத்தாா். சென்னை ஆளுநா் மாளிகையில் 2009, 2023, 2024 ஆகிய ஆண்டு தொகுதி... மேலும் பார்க்க

தொகுப்பூதிய முரண்பாடு: தமிழக அரசுக்கு சமக்ரசிக்ஷா ஊழியா்கள் கோரிக்கை

தொகுப்பூதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும் என ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஊழியா்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா். இது தொடா்பாக தமிழ்நாடு அண்ணா கணக்காளா்கள் சங்கத்... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்தச் சட்டம் ரத்து கோரி தில்லியில் நவ. 16-ல் மாநாடு: எம்.எச். ஜவாஹிருல்லா

வக்ஃப் திருத்தச் சட்டத்தை முழுமையாக ரத்து செய்யக் கோரி புதுதில்லியில் நவ.16-இல் ஜனநாயக அமைப்புகள், மனித உரிமை ஆா்வலா்கள் பங்கேற்கும் மாநாடு நடத்தப்படும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவா் எம்.எச்.ஜ... மேலும் பார்க்க