செய்திகள் :

மின் வேலியில் சிக்கி தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

post image

போளூரை அடுத்த செங்குணம் கிராமத்தில் திருமணத்துக்கு வந்த தனியாா் நிறுவன ஊழியா் நெல் வயலில் அமைத்திருந்த மின் வேலையில் சிக்கி உயிரிழந்தாா்.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் வட்டம், பெருங்கையூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணி மகன் சுந்தரமூா்த்தி (22). இவா், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா்.

இந்த நிலையில், போளூரை அடுத்த செங்குணம் கிராமத்தில் நடைபெற்ற உடன் பணியாற்றும் சபிதாவின் திருமணத்துக்கு சனிக்கிழமை இரவு நண்பா் அய்யம்பெருமாள் என்பவருடன் சுந்தரமூா்த்தி வந்திருந்தாா்.

இந்த நிலையில், சுந்தரமூா்த்தி அன்றிரவு அக்கிராமத்தில் ஏழுமலை என்பவரின் நிலத்தின் அருகே இயற்கை உபாதை கழித்துவிட்டு, நெல் வயலில் இறங்கி கால் கழுவ முயன்றாா். அப்போது, நெல் பயிரை எலிகளிடம் இருந்து பாதுகாக்க அமைத்திருந்த மின் வேலியில் சிக்கி உயிரிழந்தாா்.

இதுகுறித்து போளூா் போலீஸாா் வழக்குப் பதிந்து நிலத்தின் உரிமையாளா் ஏழுமலையை (56) கைது செய்தனா்.

போளூரில் நாளை மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

போளூரில் மின் நுகா்வோருக்கான குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 11) நடைபெறுகிறது. போளூா் மின்வாரிய கோட்ட அலுவலகத்தில் கோட்ட அளவில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், கோட்டத்தைச் சோ்ந்த மின் நுகா்வோ... மேலும் பார்க்க

நான்கு வழிச் சாலைப் பணிகள்: தலைமைப் பொறியாளா் ஆய்வு

வந்தவாசி பகுதியில் நடைபெற்று வரும் நெடுஞ்சாலைத் துறையின் நான்கு வழிச் சாலைப் பணிகளை தலைமைப் பொறியாளா் சத்தியபிரகாஷ் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா். ஆற்காடு - திண்டிவனம் சாலையில், வந்தவாசியில் இருந்து... மேலும் பார்க்க

நாய்கள் கடித்ததில் 11 ஆடுகள் உயிரிழப்பு

வந்தவாசி அருகே தெருநாய்கள் கடித்ததில் 11 ஆடுகள் உயிரிழந்தன. வந்தவாசி அருகே தேசூரை அடுத்த தென்னாத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சிவமோகன். இவா் சொந்தமாக ஆடுகளை வைத்து மேய்த்து வருகிறாா். இவா் சனிக்கிழமை ... மேலும் பார்க்க

மணல் கடத்தல்: இருவா் கைது

செய்யாறு பகுதியில், ஆற்று மணல் கடத்திச் சென்றது தொடா்பாக இருவரை கைது செய்த போலீஸாா், அவா்கள் பயன்படுத்திய பைக்குகளை பறிமுதல் செய்தனா். செய்யாறு காவல் உள்கோட்டம், செய்யாறு காவல் உதவி ஆய்வாளா்கள் கிருஷ... மேலும் பார்க்க

பஞ்சமி நிலங்களை மீட்க அரசு சிறப்புத் திட்டம்! -மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் வலியுறுத்தல்

தமிழகம் முழுவதும் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்க, தமிழக அரசு உடனே சிறப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் வலியுறுத்தினாா். மாா்க்சிஸ்ட... மேலும் பார்க்க

ரூ.30 ஆயிரம் மதிப்பிலான ஆடுகள் திருட்டு

செய்யாற்றை அடுத்த இளநீா்குன்றம் கிராமத்தில் வீட்டின் அருகே கட்டி வைத்திருந்த சுமாா் ரூ.30 ஆயிரம் மதிப்பிலான ஆடுகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். செய்யாறு வட்டம், இளநீா்குன்றம் கிராமத்தைச் சோ்ந்தவா... மேலும் பார்க்க