செய்திகள் :

மியான்மர் ஆன்லைன் மோசடி மையங்களில் இருந்து 549 இந்தியர்கள் மீட்பு!

post image

தாய்லாந்து - மியான்மர் எல்லையில் ஆன்லைன் மோசடி மையங்களில் சிக்கி விடுவிக்கப்பட்ட 549 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த இளைஞர்கள், முகவர்களால் ஏமாற்றப்பட்டு அழைத்துச் செல்லப்படுகின்றனர். அவ்வாறு தாய்லாந்து - மியன்மர் நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஆயிரக்கணக்கானோர் ஆன்லைன் பணமோசடி வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டது தெரிய வந்துள்ளது. சீன நிறுவனங்கள் இந்த மோசடி மையங்களை நடத்தி வந்ததும் கண்டறியப்பட்டுள்ளது.

மியான்மர், கம்போடியா, லாவோஸில் உள்ள மோசடி மையங்களில் வேலை செய்த இவர்கள், காதலித்து ஏமாற்றி பணம் பறிப்பது, சட்டவிரோத சூதாட்டம் என பல வழிகளில் உலகம் முழுவதும் உள்ள மக்களிடம் மோசடியில் ஈடுபட்டிருந்தனர்.

இதையடுத்து சீனா, மியான்மர், தாய்லாந்து நாடுகள் மேற்கொண்ட நடவடிக்கையில் மோசடி மையங்களில் வேலை செய்த சுமார் 7,000 பேர் மீட்கப்பட்டனர். இதில் இந்தியாவைச் சேர்ந்த 2,000 பேர் இருப்பதாக ஏற்கெனவே தகவல் வெளியானது.

அதன்படி, ஆந்திரம், தெலங்கானா,, மகாராஷ்டிரம், குஜராத், பஞ்சாப், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 549 பேர் இரண்டு ராணுவ விமானங்களின் மூலமாக இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளனர்.

செவ்வாய்க்கிழமை ஒரு விமானம் மூலமாக 266 பேரும் புதன்கிழமை ஒரு விமானம் மூலமாக 283 பேரும் மீட்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.

இதையும் படிக்க | ஆன்லைன் மோசடி! மியான்மரில் சிக்கிய 7,000 பேரைச் சொந்த நாடுகளுக்கு அனுப்பத் திட்டம்!

மராத்தியில் பேசுமாறு பஞ்சாயத்து அலுவலரைத் திட்டிய நபர் கைது!

கர்நாடக அரசு ஊழியரை மராத்தியில் பேசுமாறு தகாத வார்த்தைகளால் திட்டிய நபரைக் காவல்துறையினர் கைது செய்தனர். கர்நாடகத்தின் பெலகாவி மாவட்டத்தில் திப்பன்னா சுபாஷ் டோக்ரே என்பவர் சொத்து தொடர்பான பிரச்சினைக்க... மேலும் பார்க்க

ஜக்கி வாசுதேவ் மீதான அவதூறு விடியோவை நீக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஜக்கி வாசுதேவ் மற்றும் அவரது ஈஷா அறக்கட்டளை மீது அவதூறு பரப்பும் விதமாக பத்திரிகையாளர் வெளியிட்ட விடியோவை நீக்க தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பத்திரிகையாளரும் யூடியுபருமான ஷ்யாம் மீரா சிங் த... மேலும் பார்க்க

நாட்டின் சில்லறை பணவீக்கம் 3.61% ஆக சரிவு!

நாட்டின் சில்லறை பணவீக்கம் 7 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிந்து பிப்ரவரியில் 3.61 சதவீதமாக உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் 4 சதவீதத்துக்கும் கீழாக சரிந்துள்ளது இதுவே முதல்முறையாகும். மேலும் பார்க்க

ஹோலி பண்டிகை: தார்பாயால் மசூதிகளை மூட காவல்துறை உத்தரவு!

உத்தரப் பிரதேசத்தின் சம்பலில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு 10 மசூதிகளை தார்பாயால் மூட காவல்துறையினர் உத்தரவிட்டுள்ளனர். 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை அரிதாக நடைபெறும் நிகழ்வாக ஹிந்துக்கள் கொண்டாடும் ஹோலி பண்டி... மேலும் பார்க்க

இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு: யோகி ஆதித்யநாத்

ஹோலி, ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பிரதமரின் உஜ்வாலா யோஜனாவின் கீழுள்ள பயனாளிகளுக்கு இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்தார். லக்னௌவில் நடந்த மானி... மேலும் பார்க்க

தில்லி ஆளுநருக்கு எதிரான வழக்குகளை வாபஸ் பெறும் புதிய பாஜக அரசு?

தில்லி ஆளுநர் வி.கே. சக்சேனாவுக்கு எதிரான வழக்குகளை தில்லியின் புதிய பாஜக அரசு வாபஸ் பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தில்லியில் 10 ஆண்டுகளாக ஆம் ஆத்மி ஆட்சியில் இருந்தபோ... மேலும் பார்க்க