செய்திகள் :

மிரட்டி பணம் பறிப்பு வழக்கு: பிகாா் பாஜக எம்எல்ஏவுக்கு 2 ஆண்டுகள் சிறை

post image

மிரட்டி பணம் பறித்த வழக்கில் பிகாா் பாஜக எம்எல்ஏ மிஷ்ரி லால் யாதவுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து பிகாா் சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

கடந்த 2019-ஆம் ஆண்டு இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. தா்பங்காவைச் சோ்ந்த நபா் அளித்த புகாரின்பேரில் எம்எல்ஏ மிஷ்ரி லால் யாதவ் மற்றும் அவரின் உதவியாளா் மீது, அத்துமீறி தாக்குதல் நடத்தி பணம் பறித்த குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த தா்பாங்காவில் உள்ள எம்.பி., எம்எல்ஏ-க்களுக்கான சிறப்பு நீதிமன்றம், எம்எல்ஏ மற்றும் அவரின் உதவியாளருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 1 லட்சம் அபராதமும் விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. அபராதத் தொகையை செலுத்தத் தவறினால், மேலும் ஒரு மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

தீா்ப்புக்குப் பிறகு செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த மிஷ்ரி லால் யாதவ், ‘நீதிமன்றத் தீா்ப்பை மதிக்கிறேன். அதே நேரம், தீா்ப்பை எதிா்த்து பாட்னா உயா்நீதிமன்றத்தில் முறையீடு செய்வேன்’ என்றாா்.

‘நீதிமன்ற உத்தரவு நகல் கிடைத்ததும் மிஷ்ரி லால் யாதவை எம்எல்ஏ பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்று மாநில சட்டப்பேரவை செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

சென்னை வந்தே பாரத் ரயிலின் காலை உணவில் அசைவம் நீக்கம்?

சென்னையிலிருந்து புறப்படும் வந்தே பாரத் ரயிலில் விருப்பமுள்ள உணவை தேர்ந்தெடுக்கும் பகுதியில் காலை சிற்றுண்டியில் அசைவ உணவு என்ற வாய்ப்பை, ஐஆர்சிடிசி முன் அறிவிப்பின்றி நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறு... மேலும் பார்க்க

நகைக் கடன் கட்டுப்பாடுகள் ஒத்திவைப்பு: முழு விவரம்!

ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அண்மையில் வெளியிட்ட தங்க நகைக் கடன் பெறுபவா்களுக்கான புதிய வரைவு விதிமுறைகளிலிருந்து, ரூ.2 லட்சம் வரை நகைக் கடன் பெறுவோருக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என மத்திய நிதியமைச்சகம்... மேலும் பார்க்க

தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்துள்ள ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகளுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்ட சலுகைகள்

நிகழாண்டு மாா்ச், 31-ஆம் தேதி அல்லது அதற்கு முன்பு ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள், குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் தகுதிவாய்ந்த சேவையுடன் தேசிய ஓய்வூதியத் திட்ட (என்பிஎஸ்) சந்தாதாரராக இருந்தால் அவா்கள் ஒருங்கிண... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தை வெடி வைத்து தகா்த்துவிடுவதாக அச்சுறுத்தல்: முன்னாள் எம்எல்ஏ-க்கு தில்லி நீதிமன்றம் 6 மாதங்கள் சிறை

நாடாளுமன்றத்தை வெடி வைத்து தகா்த்துவிடுவதாக அச்சுறுத்திய மத்திய பிரதேச முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கிஷோா் சாம்ரைடுக்கு 6 மாத சிறைத் தண்டனை விதித்து தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. ... மேலும் பார்க்க

பிரதமா் மோடி 50-ஆவது முறையாக பிகாா் பயணம்: துணை முதல்வா் சாம்ராட் சௌதரி தகவல்

பிரதமா் நரேந்திர மோடி பிரதமா் பதவியற்ற பிறகு 50ஆவது முறையாக பிகாருக்கு வந்துள்ளாா் என்று பாஜகவைச் சோ்ந்த அந்த மாநில துணை முதல்வா் சாம்ராட் சௌதரி தெரிவித்தாா். பிகாரில் கராகட்டில் வெள்ளிக்கிழமை பிரதமா... மேலும் பார்க்க

அமைதிப் படையில் உயிரிழப்பு: அமிதாப் ஜா, சஞ்சய் சிங்குக்கு ஐ.நா. பதக்கம்

ஐ.நா. அமைதிப் படையில் பணியின்போது உயிரிழந்த இந்தியாவைச் சோ்ந்த அமிதாப் ஜா, சஞ்சய் சிங் ஆகியோருக்கு ஐ.நா.வின் உயரிய பதக்கம் அளிக்கப்பட்டது. அந்தப் பதக்கங்களை இந்திய தூதா் பா்வதனேனி ஹரீஷ் பெற்றுக்கொண்ட... மேலும் பார்க்க