செய்திகள் :

மீண்டும் கேப்டனாவதை தோனி எதிர்பார்த்திருக்க மாட்டார்: ஆரோன் பின்ச்

post image

ஜியோ ஹாட்ஸ்டார் நிகழ்ச்சியில் முன்னாள் ஆஸி. வீரர் ஆரோன் பின்ச் எம்.எஸ்.தோனி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியபோது, இவ்வாறான சூழ்நிலைகளை மீண்டும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார் எனக் கூறியுள்ளார்.

சிஎஸ்கே அணி முதல் அணியாக ஐபிஎல் 2025இல் இருந்து வெளியேறியுள்ளது. சொந்த மண்ணில் 5 போட்டிகளில் தோல்வியுற்றுள்ளது.

புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. நேற்றைய போட்டியில் சிஎஸ்கே அணி தோல்வியுற்றாலும் த்ரில்லராக சென்றது.

ருதுராஜுக்குப் பதிலாக தோனி கேப்டனாக மாறியிம் சிஎஸ்கே அணி தோல்வியுற்றது. இது குறித்து பின்ச் கூறியதாவது:

தோனி சில ஆண்டுகளுக்கு முன் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியபோது, இவ்வாறான சூழ்நிலைகளை மீண்டும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என அவர் எதிர்பார்த்திருக்கவே மாட்டார். ஆனால், தற்போது சிஎஸ்கேவுக்கு எதுவும் சாதகமாக இல்லை.

தோனி 43 வயதுடையவர், ஆண்டுக்கு ஒரு முறை அதுவும் ஐபிஎல் போட்டியில் மட்டுமே விளையாடுகிறார். ஆனால், அவர் களத்தில் இருக்கும் ஒவ்வொரு நிமிஷமும் மேஜிக்கலானது.

அவர் ட்ரெஸ்ஸிங் ரூமில் (ஓய்வறையில்) இருந்து வெளியே வரும்போது, பேட் செய்ய வரும்போது ஏற்படும் சத்தம், எல்லாமே அசாத்தியமானது.

தோனி இன்னும் விளையாடிக் கொண்டிருக்கும்போது, அவரை நேரில் காணும் வாய்ப்பு இருந்தால், ஒவ்வொரு ரசிகரும் குறைந்தது ஒரு சிஎஸ்கே போட்டியாவது நேரில் பார்த்தாக வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

ஐபிஎல் ரோபோ நாய்க்கு காப்புரிமை கோரி தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

ஐபிஎல் ரோபோ நாய்க்கு காப்புரிமை கோரி தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.நடப்பு ஐபிஎல் தொடர் பல்வேறு நகரங்களில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஐபிஎல்லில் கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதி நடைபெற்... மேலும் பார்க்க

சிஎஸ்கேவுக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட் எப்படி சாத்தியமானது? ரகசியம் பகிர்ந்த சஹால்!

சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்தது குறித்து பஞ்சாப் கிங்ஸ் வீரர் யுஸ்வேந்திர சஹால் மனம் திறந்துள்ளார்.ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் திடலில் நடைபெற்ற நேற்றையப் ப... மேலும் பார்க்க

பதிரானா பந்துவீச்சில் புதிய விஷயங்களை முயற்சிக்க வேண்டும்: சிஎஸ்கே பயிற்சியாளர்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர் மதீஷா பதிரானா அவரது பந்துவீச்சில் புதிய விஷயங்களை முயற்சிக்க வேண்டும் என சிஎஸ்கேவின் பந்துவீச்சு பயிற்சிளார் எரிக் சிமன்ஸ் தெரிவித்துள்ளார்.ஐபிஎல் தொ... மேலும் பார்க்க

ஆட்டத்தின் சூழல்களை நன்றாக புரிந்துகொள்ளும் ஷ்ரேயாஸ் ஐயர்; ரிக்கி பாண்டிங் பாராட்டு!

ஷ்ரேயாஸ் ஐயர் மிகவும் முதிர்ச்சியடைந்த வீரராக மாறிவிட்டதாக பஞ்சாப் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் பாராட்டியுள்ளார்.ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் திடலில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் ... மேலும் பார்க்க

தோனி யாருக்கும் எதையும் நிரூபிக்க வேண்டியதில்லை: ஆடம் கில்கிறிஸ்ட்

சிஎஸ்கே கேப்டன் தோனி குறித்து முன்னாள் ஆஸி. வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் அவர் யாருக்கும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை எனக் கூறியுள்ளார். தோனி கடைசியாக 2023இல் கேப்டனாக இருக்கும்போது சிஎஸ்கே அணி தனது 5-ஆவத... மேலும் பார்க்க

ஷ்ரேயாஸ் ஐயருக்கு ரூ.12 லட்சம் அபராதம்..! இந்த சீசனில் முதல்முறை!

சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கேப்டனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மெதுவாக பந்துவீசியதால் ரூ.12 லட்சம் அபராதம் ஸ்ரேயாஷ் ஐயருக்கு விதிக்கப்பட்டதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. சேப்பாக... மேலும் பார்க்க