செய்திகள் :

மீண்டும் சின்ன திரையில் நதியா!

post image

நடிகை நதியா சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சி சூப்பர் சிங்கர் ஜூனியர். இந்நிகழ்ச்சியின் 10-வது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதில் சிறு குழந்தைகள் தங்களது பாடும் திறமையை வெளிக்காட்டி வருகின்றனர்.

இந்நிகழ்ச்சியின் நடுவர்களாக பாடகர்கள் மனோ, சித்ரா மற்றும் இசையமைப்பாளர் இமான் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். வார இறுதி நாள்களான சனி மற்றும் ஞாயிறுதோறும் இரவு 6.30 மணிக்கு இந்நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இதையும் படிக்க: லிஜோ மோலின் ஜென்டில்வுமன் டீசர்!

இந்த வாரம் திருமண வரவேற்பு பாடல்கள் சுற்று நடைபெறவுள்ளது. போட்டியாளர்கள் திருமண வரவேற்பு பாடல்களைப் பாடுகிறார்கள், போட்டியாளர்களின் பெற்றோர்களும் திருமண கோலத்தில் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகை நதியா பங்கேற்றுள்ளார். இது தொடர்பான முன்னோட்டக் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை நதியா தமிழ் சினிமாவில் 80களில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்தவர். இவர் பூவே பூச்சூடுவா, நிலவே மலரே, பாடு நிலாவே, எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, சண்டை உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.

முன்னதாக ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜாக்பாட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்தார் நதியா. மேலும், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரோஜா தொடரில் சிறப்புத் தோற்றத்தில் இவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தினர் நாடு கடத்தல்!

குஜராத் மாநிலத்தில் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் குடியேறிய வங்கதேசத்தினர் 15 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். மேலும், 35 பேர் மார்ச் மாத இறுதிக்குள் நாடு கடத்த திட்டமிட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.தலைநகர்... மேலும் பார்க்க

தென் கொரியா: மீன்பிடி படகு கவிழ்ந்ததில் 5 பேர் மாயம்!

தென் கொரியாவில் மீன்பிடி படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் மாயாமகியுள்ளனர். அந்நாட்டின் ஜேஜு தீவின் கடல் பகுதியில் 10 பேர் பயணம் செய்த 32 டன் எடையுள்ள மீன்பிடி படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான... மேலும் பார்க்க

ஆஸ்திரிய வலது சாரி தலைவரின் புதிய அரசமைக்கும் முயற்சிகள் தோல்வி!

மத்திய ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவில் புதிய அரசை அமைக்க அந்நாட்டின் வலது சாரி தலைவரின் முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆஸ்திரியாவின் தீவிர வலது சாரி தலைவரான ஹெர்பெர்ட் க... மேலும் பார்க்க

தந்தை மீது மகள் புகார்! தாயின் உடல் தோண்டியெடுப்பு!

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் மகளின் புகாரின் அடிப்படையில் தாயின் உடலை காவல் துறையினர் தோண்டியெடுத்துள்ளனர்.அலப்புழாவைச் சேர்ந்த வி.சி.சாஜி (வயது 48) என்ற பெண், கடந்த பிப்.8 அன்று வீட்டின் படிகளி... மேலும் பார்க்க

அரசு பள்ளி சுவர் இடிந்து விழுந்து விபத்து! 3 மாணவர்கள் காயம்!

புதுச்சேரியில் அரசு பள்ளி சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 3 மாணவர்கள் காயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.புதுச்சேரி தவளகுப்பம் அடுத்த புதுக்குப்பத்தில் அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது.... மேலும் பார்க்க

மாசி மாத பூஜை: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று(பிப். 12) மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. கேரள மாநிலம், சபரிமலையில் உள்ள பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோயிலில் வருடாந்திர மண்டல பூஜை காலம் கடந்த நவம்பா் 1... மேலும் பார்க்க