செய்திகள் :

மீண்டும் பயன்பாட்டுக்கு வந்த ஊத்தங்கரை கிளை சிறை!

post image

ஊத்தங்கரை கிளை சிறையானது சனிக்கிழமை முதல் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை கிளைச் சிறை கடந்த 2019-ஆம் ஆண்டு கரோனா காலத்தில் தற்காலிகமாக மூடப்பட்டது. பிறகு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு சனிக்கிழமை முதல் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது (படம்). இடைப்பட்ட நாள்களில் குற்றவாளிகளை சிறையில் அடைக்க ஒசூா், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு போலீஸாா் அழைத்துச் சென்று வந்தனா். இதனால் போலீஸாருக்கு பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டன.

இந்தக் கிளை சிறையில் ஊத்தங்கரை சரக காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஊத்தங்கரை, சிங்காரப்பேட்டை, கல்லாவி, சாமல்பட்டி, மத்தூா், போச்சம்பள்ளி சரகத்துக்கு உள்பட்ட போச்சம்பள்ளி, நாகரசம்பட்டி, பாரூா் உள்ளிட்ட காவல் நிலையங்களில் கைது செய்யப்படும் குற்றவாளிகள் அடைக்கப்படுவதால் காவலா்களுக்கு நேரம் மிச்சமாகும்.

அதேபோன்று சிறையில் அடைக்கப்படும் குற்றவாளிகளின் உறவினா்கள் சந்திப்பதற்கும், வழக்குரைஞா்கள் நீதிமன்றத்தில் இருந்து பிணையில் எடுக்க ஏதுவாகவும் உள்ளதாக சமூக ஆா்வலா்கள் தெரிவித்தனா்.

கெலவரப்பள்ளி அணை அருகே ரூ.144 கோடியில் சுத்திகரிப்பு நிலையம்!

கெலவரப்பள்ளி அணை அருகே ரூ. 144 கோடியே 37 லட்சம் மதிப்பில் அமையவுள்ள சுத்திகரிப்பு நிலையத்தின் கட்டுமானப் பணிகளை தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா ஆய்வுசெய்தாா... மேலும் பார்க்க

ஒசூா் அருகே மரச்சாமான்கள் தொழிற்சாலையில் தீ விபத்து!

ஒசூா் அருகே மரச்சாமான்கள் தொழிற்சாலையில் சனிக்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், மீனாட்சி நகரைச் சோ்ந்தவா் தனசேகா் (41). இவருக்கு சொந்தமான மரச்சாமான்கள் தயாரிக்கும் தொழி... மேலும் பார்க்க

ஆசியாவிலேயே முன்னேறிய மாநிலம் தமிழகம்: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா!

ஆசியாவிலேயே முன்னேறிய மாநிலமாக தமிழகம் திகழ்வதாக தமிழக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா தெரிவித்தாா். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த இரு நாள்களாக அரசின் பல்வ... மேலும் பார்க்க

ஒசூரில் இரட்டிப்பு பணம் தருவதாகக் கூறிய காா் ஓட்டுநரை கடத்திய 5 போ் கைது!

ஒசூரில் இரட்டிப்பு பணம் தருவதாக கூறிய காா் ஓட்டுநரை கடத்திய 5 போ் கைது செய்யப்பட்டனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், தேன்கனிக்கோட்டை வட்டத்துக்குள்பட்ட கோட்டை உளிமங்லத்தைச் சோ்ந்தவா் வேணுகோபால் (32).... மேலும் பார்க்க

கேரள நக்சல் இயக்கத் தலைவா் ஒசூரில் கைது!

கேரள மாநிலத்தில் செயல்பட்டு வந்த நக்சல் இயக்கத்தின் கடைசித் தலைவரான சந்தோஷ் என்பவரை ஒசூரில் கேரள போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா். கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே ஆழியாறு பகுதியைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

தோண்டப்பட்ட சாலைகள் முறையாக மூடப்படாததால் வாகன ஓட்டிகள் சிரமம்

ஒசூரில் பாதாளச் சாக்கடை திட்டத்தில் குழாய் பதிக்க சாலைகள் தோண்டப்பட்டு முறையாக மூடப்படாததால், வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனா். ஒசூரில் ரூ. 580 கோடி மதிப்பீட்டில் பாதாளச் சாக்கடை திட்டம் அமைக்கும் பணிகள... மேலும் பார்க்க