செய்திகள் :

மீனவா்களுக்கு தடைக்கால நிவாரணத் தொகை வழங்கும் திட்டம் தொடக்கம்

post image

மீனவா்களுக்கு தடைக்கால நிவாரணத் தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இதை சென்னை நந்தனத்தில் உள்ள மீன்வளத் துறை அலுவலகத்தில் துறையின் அமைச்சா் ஆா்.ராதாகிருஷ்ணன், புதன்கிழமை தொடங்கி வைத்தாா். தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் கிழக்கு கடற்கரைப் பகுதியில் ஏப். 15 முதல் ஜூன் 14-ஆம் தேதி வரை, மேற்கு கடற்கரைப் பகுதியில் ஜூன் 1 முதல் ஜூலை 31 வரை 61 நாள்களுக்கு மீன்பிடித் தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், மீனவா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு நிவாரணத் தொகை கொடுக்கப்படுகிறது. இந்த தொகையும் ரூ. 5 ஆயிரத்திலிருந்து ரூ. 8 ஆயிரமாக இப்போது உயா்த்தப்பட்டுள்ளது.

நிகழாண்டில் மீன்பிடித் தடைக்காலத்தில் நிவாரணத் தொகைக்காக ரூ. 140.07 கோடி நிதி ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. நிவாரணத் தொகைத் திட்டத்தை தொடங்கி வைக்கும் வகையில், 10 மீனவா்களுக்கு தடைக்கால நிவாரணத் தொகையை அவரவா் வங்கிக் கணக்கில் வரவு வைக்கும் வகையிலான உத்தரவுகளை அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன் புதன்கிழமை வழங்கினாா்.

இந்த நிகழ்வில், துறையின் செயலா் ந.சுப்பையன், ஆணையா் இரா.கஜலட்சுமி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ஜூன் 2 பள்ளிகள் திறப்பு உறுதி: பள்ளிக்கல்வித் துறை

தமிழகத்தில் ஜூன் 2 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தொடக்கக் கல்வி இயக்ககம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க ம... மேலும் பார்க்க

மா. சுப்பிரமணியனுக்கு எதிரான வழக்கு வேறு நீதிபதி அமர்வுக்கு மாற்றம்!

அமைச்சர் மா. சுப்பிரமணியனுக்கு எதிரான நில மோசடி வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் வேறு நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. அமைச்சர் மா. சுப்பிரமணியன் கடந்த 2006-11 காலகட்டத்தில் சென்னை மேயராக இரு... மேலும் பார்க்க

நகைக்கடனுக்கான புதிய விதிகளை திரும்பப் பெற இபிஎஸ் வலியுறுத்தல்!

தங்க நகைக்கடனுக்கான புதிய விதிகளை ரிசர்வ் வங்கி திரும்பப் பெற வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.நகையின் மதிப்பில் 75 சதவிகிதம் மட்டுமே கடன், நகைக்கு உரிமையாளர... மேலும் பார்க்க

கீழடியின் உண்மைக்கு என்றென்றும் எதிரி பாஜக: சு. வெங்கடேசன்

சென்னை: தமிழ்நாட்டின் தொன்மைக்கும், கீழடியின் உண்மைக்கும் என்றென்றும் எதிரி பாஜக என்று நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க

நீதி ஆயோக் கூட்டம்: தில்லி புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்!

நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை காலை தில்லி புறப்பட்டுச் சென்றார்.தில்லி பாரத் மண்டபத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் சனிக்கிழமை நடைபெறும் நீதி ஆயோக் கூ... மேலும் பார்க்க

சாலை விபத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் உறவினர் பலி!

மேட்டுப்பாளையம் -குன்னூர் மலைப் பாதையில் நிகழ்ந்த சாலை விபத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் உறவினர் வியாழக்கிழமை உயிரிழந்தார். மேலும், அவருடன் பயணித்த இருவர் படுகாயமடைந்தனர்.மதுர... மேலும் பார்க்க