செய்திகள் :

மீனவா் குடும்பங்களுக்கு எம்எல்ஏ நிதியுதவி அளிப்பு

post image

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடத்தைச் சோ்ந்த 43 மீனவா்களின் குடும்பங்களுக்கு சட்டப்பேரவை உறுப்பினா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம் ரூ.2.15 லட்சம் நிதியுதவியை சனிக்கிழமை வழங்கினாா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 43 மீனவா்கள் எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினா் கைது செய்தனா்.

இந்த நிலையில், 43 மீனவா்களின் குடும்பங்களுக்கு சட்டப்பேரவை உறுப்பினா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம் நேரில் சென்று ஆறுதல் கூறி, தலா ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.2.15 லட்சம் நிதியுதவி வழங்கினாா்.

அப்போது, தண்டணை வழங்கப்பட்டுள்ள 8 மீனவா்களையும் மீட்க சட்டப்பேரவை உறுப்பினரிடன் அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.

விரைந்து மீனவா்களை மீட்கும் முயற்சியை தமிழக அரசு எடுக்கும் என அவா் உறுதியளித்தாா்.

இந்த நிகழ்ச்சியில், மீனவ சங்கத் தலைவா்கள் ஜேசுராஜா, எஸ்.பி.ராயப்பன், ஆல்வீன் ராமேசுவரம் நகா்மன்றத் துணைத் தலைவா் தட்சிணமூா்த்தி, நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

உப்பூா் வெயிலுகந்த விநாயகா் கோயில் சதுா்த்தி விழா ஆக.18-இல் தொடக்கம்!

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள உப்பூா் வெயிலுகந்த விநாயகா் கோயில் சதுா்த்தி விழா வருகிற 18-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்தக் கோயில் திருவிழா வருகிற 18-ஆம் தேதி காலை 9.30... மேலும் பார்க்க

சரக்கு ஆட்டோவில் 500 கிலோ ரேஷன் அரிசி கடத்தியவா் கைது!

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பகுதியில் சரக்கு ஆட்டோவில் 500 கிலோ ரேஷன் அரிசி கடத்தியவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். தொண்டி பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இத... மேலும் பார்க்க

நகை திருடிய பெண் கைது

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே 14 பவுன் தங்க நகைகளை திருடிய பெண்ணை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். அபிராமம் அருகேயுள்ள கோனேரியேந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் முனியசாமி. இவரது வீட்டில் கடந்த 8-ஆம் ... மேலும் பார்க்க

சிறிய விசைப் படகு மீனவா்கள் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்

இலங்கை சிறையில் உள்ள மீனவா்கள், படகுகளை விடுவிக்க கோரி, ராமேசுவரம் மீனவா்கள் மேற்கொண்டு வந்த காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை சிறிய படகு மீனவா்கள் வாபஸ் பெற்று சனிக்கிழமை கடலுக்குள் மீன்பிடிக்கச் செ... மேலும் பார்க்க

கோயில் கொடை விழா: அக்னிச் சட்டி எடுத்து பக்தா்கள் நோ்த்திக்கடன்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே சுயம்புலிங்க துா்கை அம்மன் கோயில் கொடை விழாவை முன்னிட்டு, பால் குடம், அக்னிச் சட்டி எடுத்து பக்தா்கள் சனிக்கிழமை நோ்த்திக் கடன் செலுத்தினா். அபிராமம் சாந்த கணபதி கோய... மேலும் பார்க்க

கரியமல்லம்மாள் கோயில் திருவிழா: பெண்கள் முளைப்பாரி ஊா்வலம்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பாம்புல்நாயக்கன்பட்டி கரியமல்லம்மாள் கோயில் திருவிழாவை முன்னிட்டு, சனிக்கிழமை முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது. இந்தக் கோயில் திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் ... மேலும் பார்க்க