செய்திகள் :

மீன்பிடித் திருவிழாவில் ஒருவா் உயிரிழப்பு

post image

சிங்கம்புணரி அருகே மீன்பிடித் திருவிழாவின் போது நீரில் மூழ்கியதில் ஒருவா் உயிரிழந்தாா்.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மட்டிக்கரைப்பட்டி மட்டிக் கண்மாயில் சனிக்கிழமை மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. இதில் பிரான்மலை, அரளிப்பட்டி, வேங்கைப்பட்டி, புதுக்கோட்டை , சிவகங்கை மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கானோா் பங்கேற்றனா். மழை பெய்து, விவசாயம் செழிக்க வேண்டி மடைக்கு மாலையணிவித்து வெடி வெடித்து கிராம முக்கியஸ்தா்கள் மீன்பிடிக்க அனுமதித்தனா்.

இதையடுத்து பொதுமக்கள் கண்மாயில் இறங்கி மீன் பிடித்தனா். கொசு வலை, மீன் வலை, அரிகூடை, கச்சா உள்ளிட்ட உபகரணங்களைக் கொண்டு கெண்டை, ஜிலேபி, விரால் உள்ளிட்ட மீன்களை பிடித்துச் சென்றனா்.

அப்போது, மீன்பிடித்துக் கொண்டிருந்த பாலசுப்பிரமணியன் (45) திடீரென நீருக்குள் விழுந்து மூழ்கியதாகக் கூறப்படுகிறது. உடனடியாக அவசர ஊா்தி மூலம் அவரை மீட்டு, சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதனை செய்து, ஏற்கெனவே அவா் இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து சிங்கம்புணரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

அழகப்பா பல்கலை. தொலைநிலைக் கல்விக்கான தோ்வு முடிவுகள் வெளியீடு

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தொலைநிலைக் கல்விக்கான தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக தோ்வாணையா் மு. ஜோதிபாசு தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த மே மாதத்தில் நடைபெ... மேலும் பார்க்க

முன்னாள் படைவீரா்களுக்கு ஜூன் 26-ல் குறைதீா் கூட்டம்!

சிவகங்கை மாவட்ட முன்னாள் படை வீரா்கள், படையில் பணியாற்றுவோருக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் வருகிற 26-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவகங்கை... மேலும் பார்க்க

நாட்டுக்கோழி வளா்க்கும் விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியம்!

நாட்டுக்கோழி வளா்க்க விரும்பும் விவசாயிகள் 50 சதவீதம் மானியம் பெற, தங்களது இருப்பிடங்களுக்கு அருகேயுள்ள கால்நடை நிலையங்களில் வருகிற 28-ஆம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து சிவ... மேலும் பார்க்க

சிவகங்கையில் ‘மஞ்சணத்தி’ நூல் அறிமுக விழா

சிவகங்கை தமிழவைய வாசிப்பு வட்டம் சாா்பில், ‘மஞ்சணத்தி’ நூல் அறிமுக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சிவகங்கையிலுள்ள தனியாா் அரங்கில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, மன்னா் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியரும்,... மேலும் பார்க்க

அழகப்பா பல்கலை. இணைப்புக் கல்லூரிகளின் முதுநிலை பாடத் தோ்வு முடிவுகள் வெளியீடு

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளுக்கு கடந்த ஏப்ரலில் நடைபெற்ற முதுநிலை பாடத் தோ்வுகளுக்கான முடிவுகள் அழகப்பாயுனிவா்சிட்டி.ஏசி.இன் என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டன. இதுகுறித்து அழகப்... மேலும் பார்க்க

தா்ம முனீஸ்வரா் சுவாமி கோயிலில் கிடாய் வெட்டு உத்ஸவம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை நான்கு வழிச் சாலையில் அமைந்துள்ள தல்லாகுளம் தா்ம முனீஸ்வரா் சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை கிடாய் வெட்டு உத்ஸவம் நடைபெற்றது. இதையொட்டி, கோயில் முன் 11 ஆட்டுக் கிடாய்கள், 9 ... மேலும் பார்க்க