Plane Crash: DNA அடையாளம் மூலம் 80 உடல்கள் ஒப்படைப்பு.. விபத்து இடத்தில் தயாரிப்...
மீன்பிடி தடை காலம் நிறைவு: வரத்து குறைவால் விலை உயா்வு
தமிழக கடல் பரப்பில் மீன்பிடி தடை காலம் சனிக்கிழமையுடன் நிறைவு பெற்ற போதிலும் ஞாயிற்றுக்கிழமை மீன்கள் வரத்து குறைவாகவே இருந்தது. இதனால் வேலூரில் மீன்கள் விலை அதிகரித்தே இருந்தது.
வேலூா் புதிய மீன் மாா்க்கெட்டில் ஏராளமான வியாபாரிகள் மீன்களை மொத்த விலைக்கும், சில்லறை விலைக்கும் விற்பனை செய்து வருகின்றனா். நள்ளிரவு 2 மணிக்கு மேல் மீன் மொத்த வியாபாரமும், காலை 6 மணிக்கு மேல் சில்லறை வியாபாரமும் நடைபெறுகிறது.
திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை நாள் ஒன்றுக்கு 50 டன் வரை மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஞாயிற்றுக் கிழமையில் மட்டும் 70 டன் மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்த நிலையில், மீன்கள் இனப்பெருக்கத்துக்காக தமிழக கடல் பரப்பில் மீன்பிடி தடைகாலம் கடந்த ஏப்ரல் 15 முதல் ஜூன் 14-ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்பட்டது. இதன் காரணமாக, கடந்த 2 மாதமாக வரத்து குறைந்து மீன்கள் விலை அதிகரித்து காணப்பட்டது.
இந்த நிலையில், மீன்பிடி தடை காலம் சனிக்கிழமையுடன் நிறைவு பெற்றபோதிலும், ஞாயிற்றுக்கிழமை மீன்கள் வரத்து குறைவால் வேலூரில் மீன்கள் விலை அதிகரித்திருந்தது.
அதன்படி, சங்கரா ரூ.300 முதல் ரூ.600, கிழங்கா ரூ.250, நண்டு ரூ.350 முதல் ரூ.400, இறால் ரூ.350 முதல் அளவுக்கு ஏற்ப விற்பனை செய்யப்பட்டதாக மீன் வியாபாரிகள் தெரிவித்தனா்.