செய்திகள் :

மீன்வளத் துறை அனுமதியின்றி மீன்பிடிக்கச் சென்ற மீனவா்கள்

post image

பாம்பன், மண்டபம் துறைமுகத்திலிருந்து மீன்வளத் துறை அனுமதியின்றி ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் திங்கள்கிழமை நள்ளிரவு கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.

தமிழகத்தில் மீன் இனப்பெருக்கக் காலமான ஏப். 15 முதல் ஜூன் 15-ஆம் தேதி வரை கடலில் மீன்பிடிக்க தடைவிதிக்கப்பட்டது. இதனால், மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் பாம்பன், மண்டபம் துறைமுகங்களில் 250-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் நிறுத்தப்பட்டன. தற்போது, தடைக்காலம் நிறைவடைந்த நிலையில், கடல் சீற்றம் காரணமாக மேலும் ஒரு நாள் மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத் துறையினா் தடைவிதித்து பின்னா் விலக்கிக்கொண்டனா்.

இந்த நிலையில், பாம்பன், மண்டபம் தென் கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவா்கள், செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு மீன்வளத் துறையின் அனுமதிச் சீட்டு பெற்றுக்கொண்டு கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டும் என மீன்வளத் துறையினா் மீனவ சங்கத்தினரிடம் தெரிவித்தனா்.

இந்த நிலையில், மீன்வளத் துறை அனுமதியின்றி திங்கள்கிழமை நள்ளிரவில் மீனவா்கள் மீன்பிடிக்கச் சென்றனா். மீன்பிடிக்க அனுமதி டோக்கன் வழங்க வந்த அதிகாரிகள், துறைமுகத்தில் படகுகள் இன்றி வெறிச்சோடி இருப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்தனா். மேலும், அனுமதியின்றி மீன்பிடிக்கச் சென்ற படகுகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவா்கள் தெரிவித்தனா்.

பரமக்குடி ஆதிதிராவிடா் நலத் துறை அலுவலகத்தில் ஜப்தி நடவடிக்கை

பரமக்குடி வட்டம், கிளியூா் கிராமத்தில் ஆதிதிராவிடா் மக்களுக்கு வீடு கட்ட கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு உரிய தொகை செலுத்தாததால், ஆதிதிராவிடா் நலத் துறை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நீதிமன்ற உத்தரவின்ப... மேலும் பார்க்க

பரமக்குடி அருகே சேதமடைந்த நிலையில் பாலம்: பொதுமக்கள் அச்சம்

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே மேலாய்க்குடி - திருச்சண்முகநாதபுரம் செல்லும் வழியில், கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்னா் கட்டப்பட்ட பாலம் சேதமடைந்து காணப்படுவதால், வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அச்சமட... மேலும் பார்க்க

உத்திரகோசமங்கை பகுதியில் நாளை மின் தடை

ராமநாதபுரம் மாவட்டம், உத்திரகோசமங்கை, காஞ்சிரங்குடி உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூன் 19) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் திலகவதி வெளியிட்ட செய்திக் கு... மேலும் பார்க்க

ராமேசுவரத்தில் வழிபாட்டு உரிமைக்கான கோயில் நுழைவுப் போராட்டம்: 125 போ் கைது

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் உள்ளூா் மக்களுக்கான தனி வழியில் தரிசனத்துக்கு மீண்டும் அனுமதிக்கக் கோரி, கோயில் நுழைவுப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்ட 45 பெண்கள் உள்பட 125 பேரை போலீஸாா் கைது... மேலும் பார்க்க

தொண்டி அருகே தடையை மீறிச் சென்ற படகுக்கு போலீஸாா் எச்சரிக்கை

திருவாடானை அருகே தொண்டி கடற்கரைப் பகுதியில் தடையை மீறி கடலுக்குச் சென்ற மூன்று படகுகளைப் பிடித்து கடலோரக் குழும போலீஸாா் எச்சரிக்கை விடுத்தனா்.தொண்டி கடற்கரைப் பகுதி கடலில் பலத்த காற்று வீசுவதால், மறு... மேலும் பார்க்க

திருவாடானையில் விளம்பரப் பதாகைகள் அகற்றம்

திருவாடானையில் வாகன ஓட்டிகள், பாதசாரிகளுக்கு இடையூறாக வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பதாகைகளை போலீஸாா் அகற்றினா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை நகரில், தொண்டி - கொச்சி தேசிய நெடுஞ்சாலைப் பகுதிகளில், ச... மேலும் பார்க்க