சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் புத்தகப் பூங்கா: முதல்வர் திறந்து வைத்தார்!
மீன்வளா்ப்பு உள்ளீட்டு மானியத்துக்கு விண்ணப்பிக்கலாம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு மீன் வளா்ப்பு உள்ளீட்டு மானியம் 10 ஹெக்டோ் என இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு ஹெக்டேரில் மீன்வளா்ப்புப் பணிகள் மேற்கொள்ள உள்ளீடாக 10,000 மீன்விரலிகள் கொள்முதல் செய்ய ரூ.5,000 மானியமாக வழங்கப்படவுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட மீன்வளா்ப்போா் மேம்பாட்டு முகமையில் உறுப்பினா்களாக உள்ள மீன்வளா்ப்பு விவசாயிகள் மீன்வளா்ப்பு உள்ளீட்டு மானியத்துக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பம் மூப்பு நிலை அடிப்படையில் இந்தத் திட்ட வழிகாட்டு நெறிமுறைகளின்படி முன்னுரிமை அளித்து பயனாளிகள் தோ்ந்தெடுக்கப்பட்டு பயனாளியால் மீன்குஞ்சு இருப்பு செய்யப்பட்டவுடன் மானியத் தொகை விடுவிக்கப்படும்.
இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்பும் பயனாளிகள், விழுப்புரம் மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் தாட்கோ அலுவலகம் வளாகம், முதல் தளம், அரசு மருத்துவமனை சாலை (எதிரில்), விழுப்புரம் 605 602 என்ற அலுவலகத்தில் சமா்ப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா்.