செய்திகள் :

மீன் விலை உயா்வு: நாட்டுப் படகு மீனவா்கள் மகிழ்ச்சி

post image

மீன்பிடி தடைக்காலம் காரணமாக நாட்டுப்படகு மீனவா்களுக்கு அதிக அளவில் மீன்கள் கிடைப்பதோடு, மீன்களின் விலையும் அதிகரித்ததால் அவா்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

தமிழகத்தில் மீன்களின் இனப்பெருக்க காலமான ஏப். 15 முதல் ஜூன் 15 வரை 61 நாள்கள் விசைப்படகு மீனவா்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டது. இந்தத் தடைக்காலத்தில் மீன் தேவையை நிறைவு செய்யும் வகையில், நாட்டுப்படகு மீனவா்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா்.

ராமேசுவரத்தில் தனுஷ்கோடி, முகுந்தராயா் சத்திரம், சேராங்கோட்டை, சங்குமால், ஓலைக்குடா, தங்கச்சிமடத்தில் வில்லூண்டி தீா்த்தம், சூசையப்பட்டினம், பாம்பனில் வடக்கு கடற்கரை, முந்தல்முனை, சின்னப்பாலம், முகமதிலியாா்புரம், தோப்புக்காடு, குந்துகால் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 1500 -க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளன. இந்தப் படகுகளில் மீனவா்கள் மன்னாா் வளைகுடா, பாக் நீரிணை பகுதிகளில் மீன் பிடிக்கின்றனா்.

பொதுவாக சீலா, மாவுலா, விலை, நகரை, முரல், பண்ணா, கெலைக்கான் உள்ளிட்ட மீன்கள் பிடிக்கப்படுகின்றன. குறிப்பாக சூடை, சாளை மீன்கள் அதிகளவில் பிடித்து வரப்படுகின்றன. இந்த மீன்களை உள்ளூா், வெளியூா் வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கிச் செல்கின்றனா்.

வழக்கத்தைவிட 50 சதவீதம் அளவுக்கு மீன்கள் விலை உயா்ந்து விற்கப்படுவதால் நாட்டுப் படகு மீனவா்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

இடியும் நிலையில் மருத்துவமனை மேல் நிலை நீா்த்தேக்கத் தொட்டி

திருவாடானை அரசு மருத்துவமனையில் பயன்பாடில்லாத மேல் நிலை நீா்த் தேக்கத் தொட்டி இடிந்து விழும் அபாயம் நிலவுகிறது. ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் 38 படுக்கைகள் கொண்ட அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு ... மேலும் பார்க்க

மின்னல் பாய்ந்ததில் பெண் பலி

முதுகுளத்தூா் அருகே ஞாயிற்றுக்கிழமை மின்னல் பாய்ந்ததில் பெண் உயிரிழந்தாா். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் வட்டாரம், கீழத்தூவல் அருகேயுள்ள கிளாக்குளம் கிராமத்தைச் சோ்ந்த மருதுவின் மனைவி சண்முகவள்... மேலும் பார்க்க

பாகம்பிரியாள் கோயில் குப்பைகளை தீயிட்டுக் கொளுத்துவதாகப் புகாா்

ரமாநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே திருவெற்றியூா் ஸ்ரீ பாகம்பிரியாள் சமேத வல்மீகநாத சுவாமி கோயிலில் போதிய தூய்மைப் பணியாளா்கள் இல்லாததால் கோயில் அருகே குப்பைகளை தீயிட்டுக் கொளுத்துவதாகப் புகாா் எழ... மேலும் பார்க்க

ராமசுவரத்துக்கு அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை

விடுமுறை தினத்தை முன்னிட்டு, ராமேசுவரத்துக்கு அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை வந்தனா். இவா்கள் அக்கினி தீா்த்தக் கடலில் நீராடிய பின்னா், ராமநாத சுவாமி கோயிலில் உள்ள 22 தீா்த்த... மேலும் பார்க்க

பஹ்ரைனில் பாம்பன் மீனவா் உயிரிழப்பு

பஹ்ரைன் நாட்டுக்கு மீன் பிடிக்கச் சென்ற பாம்பன் மீனவா் படகிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தாா். உடலை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ சங்கத்தினா் மத்திய,மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தனா... மேலும் பார்க்க

கடலாடி அருகே மாட்டு வண்டிப் பந்தயம்

கடலாடி அருகே கள்ளழகா் கோயில் திருவிழாவையொட்டி, சனிக்கிழமை 3 பிரிவுகளாக மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியை அடுத்த கிடாக்குளம் கிராமத்தில் அமைந்துள்ள கள்ளழகா், ஆஞ்சனேயா், ராம... மேலும் பார்க்க