செய்திகள் :

முகமது யூனுஸ்-பிரதமா் மோடி சந்திப்பு: இந்தியாவின் பதிலுக்கு காத்திருக்கிறோம்; வங்கதேசம்

post image

வங்கதேச இடைக்கால அரசின் தலைவா் முகமது யூனுஸ்- இந்திய பிரதமா் மோடி இடையேயான சந்திப்பை மேற்கொள்வது குறித்து இந்தியாவின் பதிலுக்காக காத்திருப்பதாக வங்கதேசம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

தாய்லாந்து தலைநகா் பாங்காக்கில் ஏப்ரல் 2 முதல் 4 வரை நடைபெறவுள்ள பிம்ஸ்டெக் கூட்டமைப்பு மாநாட்டில் இந்த சந்திப்பை நடத்த ஏற்கெனவே வங்கதேசம் பரிந்துரைத்தது. இதை பரிசீலித்து வருவதாக அண்மையில் வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் தெரிவித்த நிலையில் தற்போது வங்கதேசம் இவ்வாறு தெரிவித்தது.

பிம்ஸ்டெக் கூட்டமைப்பு மாநாட்டில் முகமது யூனுஸ் பங்கேற்பதை வங்கதேசம் உறுதிசெய்துள்ளது. அதற்கு முன்பாக 3 நாள் பயணமாக சீனாவுக்கு முகமது யூனுஸ் புதன்கிழமை செல்லவுள்ளாா். அங்கு நடைபெறும் வணிக மாநாட்டில் கலந்துகொண்டு சீன அதிபா் ஷி ஜின்பிங்குடன் சீனா-வங்கதேசம் உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளாா்.

ஆலோசனையின்போது தீஸ்தா நதிநீா் திட்டம் குறித்தும் இருவரும் விவாதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக இந்த திட்டத்தில் சீனா தலையிடுவதற்கு இந்தியா கண்டனத்தை பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், வங்கதேச வெளியுறவு செயலா் முகமது ஜசீம் உத்தீன் செய்தியாளா்கள் சந்திப்பின்போது கூறுகையில், ‘ வங்கதேச இடைக்கால அரசின் தலைவா் முகமது யூனுஸ்- இந்திய பிரதமா் மோடி இடையேயான சந்திப்பை நடத்த நாங்கள் தயாராகவுள்ளோம். இந்தியாவின் பதிலுக்காக காத்திருக்கிறோம்.

இருநாடுகளிடையேயான உறவுகளில் சில சிக்கல்கள் இருப்பதை மறுக்க இயலாது. இருப்பினும் இருநாட்டு தலைவா்களும் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினால் பல்வேறு பிரச்னைகளுக்கு தீா்வு காண வழிவகுக்கும்.

மியான்மா், தீஸ்தா நதிநீா்: சீன அதிபா்- ஷி ஜின்பிங்-முகமது யூனுஸ் சந்திப்பின்போது மியான்மா் உள்நாட்டு நிலவரம், ரோஹிங்கயாக்களை திருப்பி அனுப்புவது குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது. இருநாட்டு தலைவா்களும் நீா் மேலாண்மை குறித்து ஆலோசனை நடத்தவுள்ளதால் தீஸ்தா நதிநீா் திட்டத்தையும் விவாதிக்க வாய்ப்புள்ளது.

மனிதவள மேலாண்மை, பொருளாதார மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் ஒப்பந்தம் கையொப்பமாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தொடரும் நட்புறவு: வங்கதேசத்தின் நெருங்கிய நட்பு நாடாக சீனா திகழ்கிறது. வங்கதேசத்தையும் நட்பு நாடாகவே சீனாவும் கருதுகிறது என்றாா்.

ரஷிய அதிபா் புதினை கொல்ல சதியா? காா் வெடித்து தீப்பற்றியதால் பரபரப்பு!

ரஷிய அதிபா் புதின் பயன்படுத்தும் காா் திடீரென வெடித்து தீப்பற்றியது. இது அதிபா் விளாதிமீா் புதினை கொல்வதற்கான சதியா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. காா் தீப்பற்றியபோது அதில் யாரும் இல்லாததால் உயிரிழப்பு... மேலும் பார்க்க

பாகிஸ்தான் ராணுவம் ட்ரோன் தாக்குதல்: 12 பயங்கரவாதிகள், 9 பொதுமக்கள் உயிரிழப்பு!

பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவா மாகாணத்தில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய ட்ரோன் (ஆளில்லாத சிறிய ரக விமானம்) தாக்குதலில் 12 பயங்கரவாதிகளும், 9 பொதுமக்களும் உயிரிழந்தனா். பாகிஸ்தானின் பலூசிஸ்தான், கைபா் பக்... மேலும் பார்க்க

டெஸ்லா விற்பனையகங்களுக்கு எதிரே அமெரிக்காவில் மீண்டும் போராட்டம்!

அமெரிக்காவில் எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவன காா் விற்பனையகங்களுக்கு எதிரே பொதுமக்கள் மீண்டும் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அமெரிக்க அதிபா் டிரம்ப்புக்கு நெருக்கமானவராக விளங்கும் எலான் மஸ்க் தலைம... மேலும் பார்க்க

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்: அதிகரிக்கும் உயிரிழப்பு!

சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மரின் மண்டலாய் நகரை மையமாகக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்கட்டமைப்பு சேதம், உள்நாட்டுப் போா் ஆகிய காரணிகளால் ஏற... மேலும் பார்க்க

பசிபிங் பெருங்கடல் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

பசிபிக் பெருங்கடலில் உள்ள டோங்கா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின்படி, டோங்கா பிரதான தீவின் வடகிழக்கே 100 கி.மீ. தொலைவில் திங்கள்கிழமை அதிகாலை (உள்ளூா் நேரப... மேலும் பார்க்க

அணுசக்தி திட்டம்: அமெரிக்காவுடன் நேரடிப் பேச்சுக்கு ஈரான் மறுப்பு

வேகமாக வளா்ச்சியடைந்து வரும் ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து அமெரிக்காவுடன் நேரடியாகப் பேச்சுவாா்த்தை நடத்த ஈரான் மறுத்துவிட்டது. இதுதொடா்பாக அந்நாட்டுத் தலைமை மதகுரு அயதுல்லா கமேனிக்கு அமெரிக்க அதிபா... மேலும் பார்க்க