வேலூா் சிஎம்சியில் பள்ளி மாணவா்களுக்கான உடல்கூறியல் கண்காட்சி
முக்கிய மசோதாக்களை கூட்டத்தொடரின் கடைசி நாள்களில் தாக்கல் செய்யலாமா? -கனிமொழி எம்.பி. கண்டனம்!
முக்கிய மசோதாக்களை கூட்டத்தொடரின் கடைசி நாள்களில் தாக்கல் செய்யலாமா? என்று திமுக எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்தார்.
பிரதமா், மத்திய அமைச்சா்கள், முதல்வா் ஆகியோா் கடுமையான குற்றங்களில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டால், அவா்களைப் பதவி நீக்கம் செய்வதற்கான மசோதாக்களை நாடாளுமன்றத்தில் புதன்கிழமை மத்திய அரசு முன்மொழிந்தது.
அமைச்சர்கள், முதல்வர்கள், பிரதமரோ தொடர்ச்சியாக 30 நாள்கள்வரையில் காவலில் வைக்கப்பட்டால், 31 ஆவது நாளில் அவர்கள் தன்னிச்சையாகவே பதவிநீக்கம் செய்யப்படுவர் என்ற மசோதாவை அமித் ஷா கூறினார்.
ஆனால், இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்த நிலையில், இது குறித்து, சென்னை விமான நிலையத்தில் இன்று(ஆக. 20) செய்தியாளர்களுடன் திமுக எம்.பி. கனிமொழி பேசியதாவது: “நாடாளுமன்றம் எப்போது முடியும் என்று கடைசி நாள் வரை காத்திருந்து, அதன்பின் முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்யும் பழக்கத்தை மத்திய அரசு வழக்கமாக்கிக் கொண்டுள்ளது.
எதிர்க்கட்சிகளுக்கு மசோதாக்களை வாசிக்கக்கூட கால அவகாசம் தராமல் மத்திய அரசு மசோதாக்களை அறிமுகப்படுத்துவதுடன் தாக்கல் செய்வதையும் வழக்கமாக்கியுள்ளது.
ஜனநாயகத்தை சீர்குலைக்க வேண்டும் என்பதே அவர்களது குறிக்கோள்.
தொடர்ந்து வேண்டுகோள் விடுக்கப்பட்ட நிலையிலும், பிகாரில் வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தீவிர திருத்தம்(எஸ்.ஐ.ஆர்.) பற்றிய விவாதம் நாடாளுமன்றத்தில் நடத்தப்படவேயில்லை” என்றார்.