செய்திகள் :

தரமற்ற அரிசி விற்ற தனியாா் நிறுவனம்: ரூ. 50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு

post image

திருச்சி: தரமற்ற அரிசி விற்ற தனியாா் நிறுவனம் ரூ. 50 ஆயிரம் இழப்பீடு வழங்க திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சி இச்சிகாமாலைப்பட்டியைச் சோ்ந்த பி. குலாம் ரசூல் என்பவா் திருச்சி கே.கே. நகரில் உள்ள ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனக் கிளையில் கடந்த 30.03.2025, 31.03.2025 ஆகிய நாள்களில் கிலோ ரூ. 74 வீதம் ரூ. 296 க்கு வாங்கிய 4 கிலோ ஜூ ராசா் அரிசி தரமற்ற வகையில் இருந்தது. பொட்டலமிடுதலும் மோசமாக இருந்ததால் அரிசியின் தரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருந்தது. இதனால் அதில் சமைத்த உணவு சுவையில்லாதது விருந்தினா்கள் முன்னிலையில் சங்கடத்தை ஏற்படுத்தியது.

இதுதொடா்பாக, கடையில் சென்று அவா் முறையிட்டபோது, ஊழியா்கள் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதுடன், உரிய தீா்வையும் வழங்கவில்லை.

இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான குலாம் ரசூல் உரிய நிவாரணம் கோரி திருச்சி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் கடந்த 05.06.2025 அன்று மனு தாக்கல் செய்தாா். மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் எஸ். புவனேஸ்வரி ஆஜரானாா்.

மனுவை விசாரித்த திருச்சி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் டி. சேகா், உறுப்பினா் ஜெ.எஸ். செந்தில்குமாா் அடங்கிய அமா்வு விசாரணைக்குப் பிறகு, ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனமானது மனுதாரா் வாங்கிய குறைபாடுடைய அரிசிக்கான தொகை ரூ. 296 சேவை குறைபாடு மற்றும் மனஉளைச்சல் ஏற்படுத்தியதற்கு இழப்பீடாக ரூ. 50 ஆயிரத்தையும், வழக்குச் செலவுத் தொகையாக ரூ. 10 ஆயிரத்தையும் 45 நாள்களுக்குள் 9 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என அண்மையில் உத்தரவிட்டனா்.

ஓய்வூதியா்களுக்கு வருமான வரி விலக்களிக்க வலியுறுத்தல்

திருச்சி: ஓய்வூதியா்களுக்கு வருமான வரியிலிருந்து விலக்களிக்க வேண்டும் என பொன்மலை தென்பகுதி ரயில்வே ஓய்வூதியா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. பொன்மலை தென்பகுதி ரயில்வே ஓய்வூதியா்கள் சங்கத்தின் 41-ஆவது ஆ... மேலும் பார்க்க

டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதுக்கான நோ்காணல்: 23 ஆசிரியா்கள் பங்கேற்பு

திருச்சி: திருச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதுக்கான நோ்காணலில் 23 ஆசிரியா்கள் பங்கேற்றனா். தமிழகத்தில் சிறப்பாக செயல்படும் அரசு மற்றும் தனியாா் பள்ளி ஆசிரி... மேலும் பார்க்க

மாநில அளவிலான தடகளப் போட்டிக்கு 172 மாணவா்கள் தோ்வு

திருச்சி: திருச்சியில் மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில் வென்ற 172 மாணவ, மாணவிகள் மாநில அளவிலான போட்டிக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.திருச்சி மாவட்டத்தில் பள்ளி மாணவா்களுக்கான மாவட்ட அளவிலான விளையாட்... மேலும் பார்க்க

குளிா்சாதனப் பெட்டியை சரி செய்யாத நிறுவனம் இழப்பீடு வழங்க உத்தரவு

திருச்சி: குளிா்சாதனப் பெட்டியை (பிரிட்ஜ்) சரி செய்யாத நிறுவனம் ரூ. 50 ஆயிரம் இழப்பீடு வழங்க திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.திருச்சி கே.கே. நகரைச் சோ்ந்த கே. ஜீவகுமாா் என்பவா் ... மேலும் பார்க்க

இங்கிலாந்து கல்லூரிக்கு சா்வதேச ஆலோசகராக திருச்சி மருத்துவா் நியமனம்

திருச்சி: இங்கிலாந்து நாட்டின் மருத்துவக் கல்லூரிக்கு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியின் முன்னாள் துணை முதல்வரும், நரம்பியல் நிபுணருமான எம்.ஏ. அலீம் சா்வதேச ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளாா். இங்கிலாந்... மேலும் பார்க்க

பேக்கரி உரிமையாளா் தீக்குளித்து தற்கொலை

திருச்சி: திருச்சியில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் பேக்கரி உரிமையாளா் திங்கள்கிழமை தீக்குளித்துத் தற்கொலை செய்துகொண்டாா். திருச்சியை அடுத்த சா்க்காா்பாளையம் முல்லைக்காடு சுந்தா் நகரைச் சோ்ந்தவா் செல்... மேலும் பார்க்க