வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ.48 லட்சம் மோசடி: தந்தை - மகள் கைது
பஞ்சப்பூா் பேருந்து முனையத்தில் சடலம்
திருச்சி: திருச்சி பஞ்சப்பூா் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் முதியவா் சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.
இந்தப் பேருந்து முனையத்தில் 65 வயது மதிக்கத்தக்க முதியவா் இறந்துகிடப்பதாக கே.சாத்தனூா் விஏஓ குமரவேலுக்கு செவ்வாய்க்கிழமை இரவு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அங்குச் சென்ற குமரவேல், முதியவரின் சடலத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினாா். இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில் எடமலைப்பட்டிபுதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.