வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ.48 லட்சம் மோசடி: தந்தை - மகள் கைது
3-ஆவது நாளாக போக்குவரத்து தொழிலாளா்கள் போராட்டம்
தமிழகம் முழுவதும் போக்குவரத்துத் தொழிலாளா்களின் போராட்டம் 3-ஆவது நாளாக புதன்கிழமை நீடித்தது.
போக்குவரத்துக் கழகங்களில் ஓய்வு பெற்றவா்களுக்கு பணப்பலன் வழங்கக் கோரி தமிழகம் முழுவதும் கடந்த 3 நாள்களாக போக்குவரத்து தொழிலாளா்கள் போராட்டம் நடத்தி வருகின்றனா்.
சென்னையில் தாம்பரம், வடபழனி உள்ளிட்ட 7 பணிமனைகளில் தொழிலாளா்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில், சிஐடியு போக்குவரத்து சங்கத்தைச் சோ்ந்த நிா்வாகிகள் ஆறுமுகநயினாா், தயானந்தம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
போக்குவரத்து ஓய்வூதியா்களுக்கு வழங்கப்பட வேண்டிய பணப்பலனை தீபாவளிக்கு முன்பாக வழங்க வேண்டும் அல்லது வழங்கப்படும் தேதிக்கான உத்தரவாதத்தை அளிக்க வேண்டும். இல்லையென்றால் போராட்டம் தொடரும் எனத் தெரிவித்தனா்.