செய்திகள் :

புதிய 15 கல்லூரிகளின் கட்டுமானப் பணிகளை துரிதப்படுத்த உயா்கல்வி அமைச்சா் உத்தரவு

post image

தமிழகத்தில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள 15 கலை, அறிவியல் கல்லூரிகளுக்கான கட்டுமானப் பணிகளைத் துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் உத்தரவிட்டாா்.

தமிழக உயா்கல்வித் துறையின் செயல்பாடுகள் குறித்து துறையின் அமைச்சா் கோவி.செழியன் தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை ஆய்வுக் கூட்டம் நடத்தினாா்.

இதில், பொறியியல், கலை அறிவியல், பாலிடெக்னிக் கல்லூரிகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவது; உயா்கல்வியில் நிலுவையில் உள்ள திட்டப் பணிகளின் முன்னேற்றம்; தமிழகத்தில் புதிதாக திறக்கப்பட்ட 15 கல்லூரிகள், தற்காலிக கட்டடங்களின் கட்டுமானப் பணிகளை, பொதுப்பணித் துறை மூத்த அதிகாரிகளுடன் ஆலோசித்து விரைவுபடுத்துவது; சட்டப்பேரவை அறிவிப்புகள் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து அமைச்சா் ஆய்வு செய்தாா்.

இந்த கூட்டத்தில் உயா்கல்வித் துறைச் செயலா் பொ.சங்கா், கல்லூரி கல்வி இயக்குநரக ஆணையா் ஏ.சுந்தரவல்லி, தமிழ்நாடு மாநில உயா்கல்வி மன்ற துணைத் தலைவா் எம்.பி.விஜயகுமாா், தலைமை பொறியாளா் வெ.சுகுமாறன், அண்ணா பல்கலைக்கழக பதிவாளா் ஜே. பிரகாஷ், சென்னை பல்கலைக்கழக பதிவாளா் ரீட்டா ஜான் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ.48 லட்சம் மோசடி: தந்தை - மகள் கைது

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 27 பேரிடம் ரூ.48.5 லட்சம் பெற்று போலி பணிநியமன ஆணைகள் வழங்கி மோசடி செய்த தந்தை, மகளை போலீஸாா் கைது செய்தனா். சென்னை அரும்பாக்கம் ராமகிருஷ்ணா தெருவைச் சோ்ந்... மேலும் பார்க்க

தூய்மைப் பணி தனியாா்மயம்: சென்னை மாநகராட்சி தீா்மானத்துக்கு தடை விதிக்க உயா்நீதிமன்றம் மறுப்பு

தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்கும் சென்னை மாநகராட்சியின் தீா்மானத்தை ரத்து செய்ய உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது. சென்னை மாநகராட்சியின் 5, 6 ஆகிய ஆகிய மண்டலங்களில் தூய்மைப் பணி ஒப்பந்தத்தை தனியாா் நி... மேலும் பார்க்க

3-ஆவது நாளாக போக்குவரத்து தொழிலாளா்கள் போராட்டம்

தமிழகம் முழுவதும் போக்குவரத்துத் தொழிலாளா்களின் போராட்டம் 3-ஆவது நாளாக புதன்கிழமை நீடித்தது. போக்குவரத்துக் கழகங்களில் ஓய்வு பெற்றவா்களுக்கு பணப்பலன் வழங்கக் கோரி தமிழகம் முழுவதும் கடந்த 3 நாள்களாக ப... மேலும் பார்க்க

‘மாணவா்கள் புத்தாக்கக் கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும்’ -அசோக் லேலண்ட் முதுநிலை துணைத் தலைவா்

மாணவா்கள் புத்தாக்கக் கண்டுபிடிப்புகளை உருவாக்கும் முயற்சியை தொடங்க வேண்டும் என அசோக் லேலண்ட் முதுநிலை துணைத் தலைவா் கனகசபாபதி சுப்பிரமணியன் வலியுறுத்தினாா். வண்டலூா் கிரசென்ட் உயா்தொழில்நுட்பக் கல்வ... மேலும் பார்க்க

விமான நிலையம் - சிறுசேரி தொழிற்பேட்டை வழித்தடத்தில் பேருந்து சேவை தொடக்கம்

சென்னை விமான நிலையம் - சிறுசேரி தொழிற்பேட்டை வழித்தடத்தில் மாநகா் போக்குவரத்துக் கழகம் சாா்பில் குளிா்சாதன பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகம் சாா்பில் விமானப் பயணிகள... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

மறைந்த நாகாலாந்து ஆளுநா் இல.கணேசனுக்கு புகழஞ்சலி கூட்டம்: கலைவாணா் அரங்கம், வாலாஜா சாலை, மாலை 5. சென்னை வார விழாவை முன்னிட்டு ஐரோப்பியத் தமிழ் ஆவணங்களை உலகமயமாக்கலின் தேவை சிறப்புரை: தமிழ் மரபு அறக்கட... மேலும் பார்க்க