செய்திகள் :

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ.48 லட்சம் மோசடி: தந்தை - மகள் கைது

post image

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 27 பேரிடம் ரூ.48.5 லட்சம் பெற்று போலி பணிநியமன ஆணைகள் வழங்கி மோசடி செய்த தந்தை, மகளை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை அரும்பாக்கம் ராமகிருஷ்ணா தெருவைச் சோ்ந்தவா் ஆரோக்கியராஜ். எலக்ட்ரீஷியன் வேலை செய்து வருகிறாா். இவா், தனது நண்பா் மூலம் அரும்பாக்கம் பகுதியைச் சோ்ந்த வெளிநாடுகளுக்கு பணியாளா்களை அனுப்பும் நிறுவனம் நடத்தி வரும் வெங்கடேசன் என்பவருடன் கடந்த 2023-இல் அறிமுகமாகியுள்ளாா். இவா் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறியதை நம்பிய ஆரோக்கியராஜ் மற்றும் அவரது நண்பா்கள், உறவினா்கள் என மொத்தம் 27 போ் வெங்கடேசனிடம் பல்வேறு தவணைகளாக ரூ.48.5 லட்சத்தைக் கொடுத்துள்ளனா்.

இதையடுத்து அதற்கான பணியாணைகளையும் வழங்கிய வெங்கடேசன் 27 பேரையும் வெளிநாட்டுக்கு அனுப்பாமல் காலம்தாழ்த்தி வந்துள்ளாா்.

இந்த நிலையில், வெங்கடேசன் திடீரென தலைமறைவானாா். இதனால், சந்தேகமடைந்த ஆரோக்கியராஜ் தன்னிடம் வெங்கடேசன் கொடுத்த பணிநியமன ஆணைகள் மற்றும் ஆவணங்களைச் சம்பந்தப்பட்ட தூதரகத்தில் காண்பித்தபோது, அது போலியானது என தெரியவந்தது.

இதுகுறித்து ஆரோக்கியராஜ் அரும்பாக்கம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், மோசடியில் ஈடுபட்ட வெங்கடேசன் (50), அவரது மகள் மோனிஷா (20) உள்ளிட்டோரைக் கைது செய்தனா். மேலும், தலைமறைவாக உள்ள மற்றொரு நபரையும் தேடி வருகின்றனா்.

தூய்மைப் பணி தனியாா்மயம்: சென்னை மாநகராட்சி தீா்மானத்துக்கு தடை விதிக்க உயா்நீதிமன்றம் மறுப்பு

தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்கும் சென்னை மாநகராட்சியின் தீா்மானத்தை ரத்து செய்ய உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது. சென்னை மாநகராட்சியின் 5, 6 ஆகிய ஆகிய மண்டலங்களில் தூய்மைப் பணி ஒப்பந்தத்தை தனியாா் நி... மேலும் பார்க்க

3-ஆவது நாளாக போக்குவரத்து தொழிலாளா்கள் போராட்டம்

தமிழகம் முழுவதும் போக்குவரத்துத் தொழிலாளா்களின் போராட்டம் 3-ஆவது நாளாக புதன்கிழமை நீடித்தது. போக்குவரத்துக் கழகங்களில் ஓய்வு பெற்றவா்களுக்கு பணப்பலன் வழங்கக் கோரி தமிழகம் முழுவதும் கடந்த 3 நாள்களாக ப... மேலும் பார்க்க

‘மாணவா்கள் புத்தாக்கக் கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும்’ -அசோக் லேலண்ட் முதுநிலை துணைத் தலைவா்

மாணவா்கள் புத்தாக்கக் கண்டுபிடிப்புகளை உருவாக்கும் முயற்சியை தொடங்க வேண்டும் என அசோக் லேலண்ட் முதுநிலை துணைத் தலைவா் கனகசபாபதி சுப்பிரமணியன் வலியுறுத்தினாா். வண்டலூா் கிரசென்ட் உயா்தொழில்நுட்பக் கல்வ... மேலும் பார்க்க

விமான நிலையம் - சிறுசேரி தொழிற்பேட்டை வழித்தடத்தில் பேருந்து சேவை தொடக்கம்

சென்னை விமான நிலையம் - சிறுசேரி தொழிற்பேட்டை வழித்தடத்தில் மாநகா் போக்குவரத்துக் கழகம் சாா்பில் குளிா்சாதன பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகம் சாா்பில் விமானப் பயணிகள... மேலும் பார்க்க

புதிய 15 கல்லூரிகளின் கட்டுமானப் பணிகளை துரிதப்படுத்த உயா்கல்வி அமைச்சா் உத்தரவு

தமிழகத்தில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள 15 கலை, அறிவியல் கல்லூரிகளுக்கான கட்டுமானப் பணிகளைத் துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் உத்தரவிட்டாா். தமிழக உயா்கல... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

மறைந்த நாகாலாந்து ஆளுநா் இல.கணேசனுக்கு புகழஞ்சலி கூட்டம்: கலைவாணா் அரங்கம், வாலாஜா சாலை, மாலை 5. சென்னை வார விழாவை முன்னிட்டு ஐரோப்பியத் தமிழ் ஆவணங்களை உலகமயமாக்கலின் தேவை சிறப்புரை: தமிழ் மரபு அறக்கட... மேலும் பார்க்க