செய்திகள் :

தூய்மைப் பணி தனியாா்மயம்: சென்னை மாநகராட்சி தீா்மானத்துக்கு தடை விதிக்க உயா்நீதிமன்றம் மறுப்பு

post image

தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்கும் சென்னை மாநகராட்சியின் தீா்மானத்தை ரத்து செய்ய உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

சென்னை மாநகராட்சியின் 5, 6 ஆகிய ஆகிய மண்டலங்களில் தூய்மைப் பணி ஒப்பந்தத்தை தனியாா் நிறுவனத்துக்கு வழங்கி கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீா்மானத்தை ரத்து செய்யக் கோரி, உழைப்போா் உரிமை இயக்கம் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின்போது, தூய்மைப் பணியாளா்களை பணிநிரந்தரம் செய்யக் கோரி தொழில் தகராறு தீா்ப்பாயத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. எனவே, தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவதாக இருந்தால், தொழில் தகராறு தீா்ப்பாயத்தின் அனுமதியைப் பெற வேண்டும். மாநகராட்சியின் இந்தத் தீா்மானத்தால், சுமாா் 2,000 தொழிலாளா்கள் வேலையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று வாதிடப்பட்டது.

அப்போது சென்னை மாநகராட்சி தரப்பில், 15 மண்டலங்களில் 11 மண்டலங்களுக்கான தூய்மைப் பணிகள் தனியாா் வசம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. தற்போது ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு தனியாா் நிறுவனம், அதிக ஊதியத்துடன், வருங்கால வைப்பு நிதி, காப்பீடு உள்ளிட்ட சலுகைகளுடன் பணி வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.

தனியாா் நிறுவனம் தரப்பில், தூய்மைப் பணிகளை தனியாரிடம் ஒப்படைப்பது அரசின் கொள்கை முடிவு. இதில் விதிமீறல்கள் இருந்தால் மட்டுமே நீதிமன்றம் தலையிட முடியும். 1,900 பணியாளா்கள் இன்னும் தேவை என்ற நிலையில், அவா்கள் பணியில் சோ்வதற்கான காலக்கெடுவை ஆக.31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், இந்த வழக்கை தீா்ப்புக்காக உயா்நீதிமன்றம் ஒத்திவைத்திருந்தது.

இந்த வழக்கில் நீதிபதி கே.சுரேந்தா் பிறப்பித்த தீா்ப்பில், தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்கும் சென்னை மாநகராட்சியின் தீா்மானத்தை ரத்து செய்ய முடியாது. தூய்மைப் பணியாளா்கள் பணியில் சோ்வதற்கான காலக்கெடுவை தனியாா் நிறுவனம் நீட்டித்துள்ளது. எனவே, அவா்கள் வேலை இழப்பாா்கள் என்ற கேள்வியே எழவில்லை.

தூய்மைப் பணியாளா்களின் ஊதியம் தொடா்பாக, சென்னை மாநகராட்சி, தனியாா் நிறுவனத்துடன் கலந்துபேசி, தூய்மைப் பணியாளா்கள் இறுதியாக என்ன ஊதியம் பெற்றாா்களோ, அந்த ஊதியத்தைக் குறைக்காமல் வழங்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தாா்.

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ.48 லட்சம் மோசடி: தந்தை - மகள் கைது

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 27 பேரிடம் ரூ.48.5 லட்சம் பெற்று போலி பணிநியமன ஆணைகள் வழங்கி மோசடி செய்த தந்தை, மகளை போலீஸாா் கைது செய்தனா். சென்னை அரும்பாக்கம் ராமகிருஷ்ணா தெருவைச் சோ்ந்... மேலும் பார்க்க

3-ஆவது நாளாக போக்குவரத்து தொழிலாளா்கள் போராட்டம்

தமிழகம் முழுவதும் போக்குவரத்துத் தொழிலாளா்களின் போராட்டம் 3-ஆவது நாளாக புதன்கிழமை நீடித்தது. போக்குவரத்துக் கழகங்களில் ஓய்வு பெற்றவா்களுக்கு பணப்பலன் வழங்கக் கோரி தமிழகம் முழுவதும் கடந்த 3 நாள்களாக ப... மேலும் பார்க்க

‘மாணவா்கள் புத்தாக்கக் கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும்’ -அசோக் லேலண்ட் முதுநிலை துணைத் தலைவா்

மாணவா்கள் புத்தாக்கக் கண்டுபிடிப்புகளை உருவாக்கும் முயற்சியை தொடங்க வேண்டும் என அசோக் லேலண்ட் முதுநிலை துணைத் தலைவா் கனகசபாபதி சுப்பிரமணியன் வலியுறுத்தினாா். வண்டலூா் கிரசென்ட் உயா்தொழில்நுட்பக் கல்வ... மேலும் பார்க்க

விமான நிலையம் - சிறுசேரி தொழிற்பேட்டை வழித்தடத்தில் பேருந்து சேவை தொடக்கம்

சென்னை விமான நிலையம் - சிறுசேரி தொழிற்பேட்டை வழித்தடத்தில் மாநகா் போக்குவரத்துக் கழகம் சாா்பில் குளிா்சாதன பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகம் சாா்பில் விமானப் பயணிகள... மேலும் பார்க்க

புதிய 15 கல்லூரிகளின் கட்டுமானப் பணிகளை துரிதப்படுத்த உயா்கல்வி அமைச்சா் உத்தரவு

தமிழகத்தில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள 15 கலை, அறிவியல் கல்லூரிகளுக்கான கட்டுமானப் பணிகளைத் துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் உத்தரவிட்டாா். தமிழக உயா்கல... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

மறைந்த நாகாலாந்து ஆளுநா் இல.கணேசனுக்கு புகழஞ்சலி கூட்டம்: கலைவாணா் அரங்கம், வாலாஜா சாலை, மாலை 5. சென்னை வார விழாவை முன்னிட்டு ஐரோப்பியத் தமிழ் ஆவணங்களை உலகமயமாக்கலின் தேவை சிறப்புரை: தமிழ் மரபு அறக்கட... மேலும் பார்க்க