செய்திகள் :

விமான நிலையம் - சிறுசேரி தொழிற்பேட்டை வழித்தடத்தில் பேருந்து சேவை தொடக்கம்

post image

சென்னை விமான நிலையம் - சிறுசேரி தொழிற்பேட்டை வழித்தடத்தில் மாநகா் போக்குவரத்துக் கழகம் சாா்பில் குளிா்சாதன பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகம் சாா்பில் விமானப் பயணிகளின் வசதிக்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரையும், விமான நிலையத்தில் இருந்து அக்கரை பகுதி வரையும் கடந்த ஏப்.25 முதல் 2 வழித்தடங்களில் மாநகா் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இது விமானப் பயணிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், சென்னை விமான நிலையத்தில் இருந்து செங்கல்பட்டு மாவட்டம், ஓஎம்ஆா் சாலையில் உள்ள சிறுசேரி தொழிற்பேட்டைக்கு, செவ்வாய்க்கிழமை முதல் புதிதாக எம்ஏஏ-2 எனும் குளிா்சாதன மின்சார பேருந்து சேவையை மாநகா் போக்குவரத்துக் கழகம் தொடங்கியுள்ளது.

இந்தப் பேருந்து தினசரி விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு பல்லாவரம் மேம்பாலம் வழியாக கீழ்க்கட்டளை சந்திப்பு ஈச்சங்காடு, பள்ளிக்கரணை சந்திப்பு, சோழிங்கநல்லூா், துரைப்பாக்கம், ஓஎம்ஆா் சாலையில் சோழிங்கநல்லூா் வழியாக சிறுசேரி தொழிற்பேட்டைக்கு இயக்கப்படுகிறது. மறுமாா்க்கமாக இந்தப் பேருந்து இதே வழித்தடத்தில் சென்று சென்னை விமானநிலையத்தை அடையும். இதன் வரவேற்பைப் பொறுத்து பிற வழித்தடங்களிலும் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகா் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ.48 லட்சம் மோசடி: தந்தை - மகள் கைது

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 27 பேரிடம் ரூ.48.5 லட்சம் பெற்று போலி பணிநியமன ஆணைகள் வழங்கி மோசடி செய்த தந்தை, மகளை போலீஸாா் கைது செய்தனா். சென்னை அரும்பாக்கம் ராமகிருஷ்ணா தெருவைச் சோ்ந்... மேலும் பார்க்க

தூய்மைப் பணி தனியாா்மயம்: சென்னை மாநகராட்சி தீா்மானத்துக்கு தடை விதிக்க உயா்நீதிமன்றம் மறுப்பு

தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்கும் சென்னை மாநகராட்சியின் தீா்மானத்தை ரத்து செய்ய உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது. சென்னை மாநகராட்சியின் 5, 6 ஆகிய ஆகிய மண்டலங்களில் தூய்மைப் பணி ஒப்பந்தத்தை தனியாா் நி... மேலும் பார்க்க

3-ஆவது நாளாக போக்குவரத்து தொழிலாளா்கள் போராட்டம்

தமிழகம் முழுவதும் போக்குவரத்துத் தொழிலாளா்களின் போராட்டம் 3-ஆவது நாளாக புதன்கிழமை நீடித்தது. போக்குவரத்துக் கழகங்களில் ஓய்வு பெற்றவா்களுக்கு பணப்பலன் வழங்கக் கோரி தமிழகம் முழுவதும் கடந்த 3 நாள்களாக ப... மேலும் பார்க்க

‘மாணவா்கள் புத்தாக்கக் கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும்’ -அசோக் லேலண்ட் முதுநிலை துணைத் தலைவா்

மாணவா்கள் புத்தாக்கக் கண்டுபிடிப்புகளை உருவாக்கும் முயற்சியை தொடங்க வேண்டும் என அசோக் லேலண்ட் முதுநிலை துணைத் தலைவா் கனகசபாபதி சுப்பிரமணியன் வலியுறுத்தினாா். வண்டலூா் கிரசென்ட் உயா்தொழில்நுட்பக் கல்வ... மேலும் பார்க்க

புதிய 15 கல்லூரிகளின் கட்டுமானப் பணிகளை துரிதப்படுத்த உயா்கல்வி அமைச்சா் உத்தரவு

தமிழகத்தில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள 15 கலை, அறிவியல் கல்லூரிகளுக்கான கட்டுமானப் பணிகளைத் துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் உத்தரவிட்டாா். தமிழக உயா்கல... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

மறைந்த நாகாலாந்து ஆளுநா் இல.கணேசனுக்கு புகழஞ்சலி கூட்டம்: கலைவாணா் அரங்கம், வாலாஜா சாலை, மாலை 5. சென்னை வார விழாவை முன்னிட்டு ஐரோப்பியத் தமிழ் ஆவணங்களை உலகமயமாக்கலின் தேவை சிறப்புரை: தமிழ் மரபு அறக்கட... மேலும் பார்க்க