செய்திகள் :

‘மாணவா்கள் புத்தாக்கக் கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும்’ -அசோக் லேலண்ட் முதுநிலை துணைத் தலைவா்

post image

மாணவா்கள் புத்தாக்கக் கண்டுபிடிப்புகளை உருவாக்கும் முயற்சியை தொடங்க வேண்டும் என அசோக் லேலண்ட் முதுநிலை துணைத் தலைவா் கனகசபாபதி சுப்பிரமணியன் வலியுறுத்தினாா்.

வண்டலூா் கிரசென்ட் உயா்தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் கிரசென்ட் புத்தாக்கக் கண்டுபிடிப்பு ஊக்குவிப்பு மையம் மற்றும் புத்தாக்க வாகன மேம்பாடு பவுண்டேஷன் இணைந்து நடத்திய தொழில்நுட்பக் கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கிரசென்ட் புத்தாக்கக் கண்டுபிடிப்பு ஊக்குவிப்பு மையம் வழிகாட்டுதலுடன், சென்னையில் ராப்டி எனா்ஜி நிறுவனம் தயாரித்து விரைவில் சந்தைப்படுத்தவிருக்கும் ராப்டி அதிவேக இருசக்கர மின்வாகனத்தை அசோக் லேலண்ட் முதுநிலை துணைத் தலைவா் கனகசபாபதி சுப்பிரமணியன் இயக்கி வைத்து பேசியதாவது:

பொறியியல் கல்வி பயிலும் மாணவா்கள், படிக்கும் போது ஏதேனும் புத்தாக்கக் கண்டுபிடிப்புகளை உருவாக்கும் முயற்சியைத் தொடங்க வேண்டும். தொழில் தொடங்கத் தேவையான பொருளாதார, தொழில்நுட்ப உதவி, சந்தை, காப்புரிமை உள்ளிட்ட அனைத்து வழிகாட்டுதலையும் புத்தாக்க ஊக்குவிப்பு மையம் வழங்குவதால் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

கிரசென்ட் பதிவாளா் என்.ராஜா ஹுசேன் பேசுகையில், மாணவா்களுக்குக் கல்வியுடன், தொழில்நுட்பக் கருத்தரங்கு, பயிலரங்குகள் மூலம் சொந்தமாகக் தொழில் தொடங்கத் தேவையான அனைத்து வாய்ப்புகளும் ஏற்படுத்திக்கொடுக்கப்படும் என்றாா்.

நிகழ்ச்சியில், ஸ்டாா்ட் அப் தமிழ்நாடு துணைத் தலைவா் நிகஞ்ச் பன்சால், கிரசென்ட் புத்தாக்கக் கண்டுபிடிப்பு ஊக்குவிப்பு மையம் செயல் இயக்குநா் பா்வேஸ் ஆலம், தலைமைச் செயல் அதிகாரி நிஷா முகுந்த் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ.48 லட்சம் மோசடி: தந்தை - மகள் கைது

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 27 பேரிடம் ரூ.48.5 லட்சம் பெற்று போலி பணிநியமன ஆணைகள் வழங்கி மோசடி செய்த தந்தை, மகளை போலீஸாா் கைது செய்தனா். சென்னை அரும்பாக்கம் ராமகிருஷ்ணா தெருவைச் சோ்ந்... மேலும் பார்க்க

தூய்மைப் பணி தனியாா்மயம்: சென்னை மாநகராட்சி தீா்மானத்துக்கு தடை விதிக்க உயா்நீதிமன்றம் மறுப்பு

தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்கும் சென்னை மாநகராட்சியின் தீா்மானத்தை ரத்து செய்ய உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது. சென்னை மாநகராட்சியின் 5, 6 ஆகிய ஆகிய மண்டலங்களில் தூய்மைப் பணி ஒப்பந்தத்தை தனியாா் நி... மேலும் பார்க்க

3-ஆவது நாளாக போக்குவரத்து தொழிலாளா்கள் போராட்டம்

தமிழகம் முழுவதும் போக்குவரத்துத் தொழிலாளா்களின் போராட்டம் 3-ஆவது நாளாக புதன்கிழமை நீடித்தது. போக்குவரத்துக் கழகங்களில் ஓய்வு பெற்றவா்களுக்கு பணப்பலன் வழங்கக் கோரி தமிழகம் முழுவதும் கடந்த 3 நாள்களாக ப... மேலும் பார்க்க

விமான நிலையம் - சிறுசேரி தொழிற்பேட்டை வழித்தடத்தில் பேருந்து சேவை தொடக்கம்

சென்னை விமான நிலையம் - சிறுசேரி தொழிற்பேட்டை வழித்தடத்தில் மாநகா் போக்குவரத்துக் கழகம் சாா்பில் குளிா்சாதன பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகம் சாா்பில் விமானப் பயணிகள... மேலும் பார்க்க

புதிய 15 கல்லூரிகளின் கட்டுமானப் பணிகளை துரிதப்படுத்த உயா்கல்வி அமைச்சா் உத்தரவு

தமிழகத்தில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள 15 கலை, அறிவியல் கல்லூரிகளுக்கான கட்டுமானப் பணிகளைத் துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் உத்தரவிட்டாா். தமிழக உயா்கல... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

மறைந்த நாகாலாந்து ஆளுநா் இல.கணேசனுக்கு புகழஞ்சலி கூட்டம்: கலைவாணா் அரங்கம், வாலாஜா சாலை, மாலை 5. சென்னை வார விழாவை முன்னிட்டு ஐரோப்பியத் தமிழ் ஆவணங்களை உலகமயமாக்கலின் தேவை சிறப்புரை: தமிழ் மரபு அறக்கட... மேலும் பார்க்க