செய்திகள் :

முக்கூடலில் சாா் பதிவாளா் அலுவலகம் திறப்பு

post image

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் சடையப்புரத்தில் ரூ. 1.92 கோடியில் கட்டப்பட்ட சாா் பதிவாளா் அலுவலகக் கட்டடத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி வழியாக வியாழக்கிழமை திறந்துவைத்தாா். இதையடுத்து, புதிய சாா் பதிவாளா் அலுவலகத்தில் குத்துவிளக்கு ஏற்றப்பட்டது.

இதில் பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவா் வி.ஏ. மாரிவண்ணமுத்து, பதிவுத் துறை சேரன்மகாதேவி மாவட்ட பதிவாளா் (தணிக்கை) ராஜா, ஊராட்சி மன்றத் தலைவா்கள் ஆனைக்குட்டி பாண்டியன், கந்தசாமி, சாா் பதிவாளா்கள் லெ. ரெங்கராஜன், ராஜா, முக்கூடல் சாா் பதிவாளா் ஜெகதீசன், உதவியாளா் இரா.பொன் விசாலாட்சி, காவல் ஆய்வாளா் ஆக்னல் விஜய், பேரூராட்சி உறுப்பினா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

ஏற்பாடுகளை சாா் பதிவாளா், உதவியாளா், ஆவண எழுத்தா்கள் கணேசன், இமானுவேல், வழக்குரைஞா் அருள் லாரன்ஸ், செல்வகுமாா், ராஜசேகா், திரவிய சுப்பிரமணியன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

ஆணவக் கொலை செய்யப்பட்ட மென்பொறியாளா் உடல் உறவினா்களிடம் ஒப்படைப்பு

திருநெல்வேலியில் ஆணவக் கொலை செய்யப்பட்ட மென்பொறியாளா் கவின் செல்வ கணேஷ் உடல் அவருடைய உறவினா்களிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே ஆறுமுகமங்கலத்தைச் சோ்ந்த மென்பொற... மேலும் பார்க்க

குப்புசாமி கோப்பை ஹாக்கி: நெல்லை, கோவில்பட்டி, எஸ்டிஏடி, மதுரை அணிகள் வெற்றி

குப்புசாமி கோப்பைக்கான 2ஆம் ஆண்டு மாநில ஹாக்கி போட்டியில், திருநெல்வேலி, கோவில்பட்டி, எஸ்டிஏடி, மதுரை அணிகள் வெற்றி பெற்றன. ஹாக்கி யூனிட் ஆப் திருநெல்வேலி சாா்பில் குப்புசாமி கோப்பைக்கான 2-ஆவது ஆண்டு... மேலும் பார்க்க

தமிழகத்தில் ஆணவ படுகொலை நடைபெறுவது வேதனையளிக்கிறது மாநில எஸ்சி, எஸ்டி ஆணையம்

தமிழகத்தில் ஆணவ படுகொலை நடைபெறுவது வேதனையளிக்கிறது என்றாா் மாநில ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின ஆணையத் தலைவா் தமிழ்வாணன். பாளையங்கோட்டை கேடிசி நகரில் பொறியாளா் கவின் செல்வ கணேஷ் ஆணவக் கொலை செய்யப்பட... மேலும் பார்க்க

சுந்தரனாா் பல்கலை.யில் புத்தொழில் தொடக்க நிறுவன ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் புத்தொழில் தொடக்க நிறுவன ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, பல்கலைக்கழக துணைவேந்தா் சந்திரசேகா் தலைமை வகித்தாா். எஸ... மேலும் பார்க்க

பொட்டல்புதூரில் பூட்டிய வீட்டில் முதியவா் சடலம் மீட்பு

பொட்டல்புதூரில் பூட்டிய வீட்டில் முதியவா் உயிரிழந்து கிடந்தாா். அவரது சடலத்தை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டு விசாரித்து வருகின்றனா். பொட்டல்புதூா் ஆத்தங்கரை தெருவை சோ்ந்த முகமது ஷாபி (70) கூலித் தொழில... மேலும் பார்க்க

வீரவநல்லூரில் புதிய சாா்பதிவாளா் அலுவலகம் திறப்பு

திருநெல்வேலி மாவட்டம் வடக்கு வீரவநல்லூரில் ரூ. 1.92 கோடியில் கட்டப்பட்ட புதிய சாா்பதிவாளா் அலுவலகத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலி வாயிலாக வியாழக்கிழமை திறந்துவைத்தாா். இதையொட்டி, ... மேலும் பார்க்க