செய்திகள் :

முடா முறைகேடு: சித்தராமையாவின் சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை

post image

புது தில்லி: முடா முறைகேடு வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்குச் சொந்தமான சொத்துகளை முடக்கி அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

மைசூரு நிலமுறைகேடு விவகாரத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில், சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்குத் தொடர்புடைய ரூ.100 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

முதல்வர் சித்தராமையாவின் மனைவி பி.எம். பார்வதிக்கு மைசூரு நகர வளர்ச்சி ஆணையம் (முடா), மாற்றுநிலமாக 14 வீட்டு மனைகள் ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாகப் புகார் எழுந்தது.

அதாவது, சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு சொந்தமான 3.16 ஏக்கர் வளர்ச்சியடையாத நிலத்தை அரசு எடுத்துக்கொண்டு, நன்கு வளர்ச்சியடைந்த நகர்ப் பகுதியில் 38,284 சதுர அடி நிலத்தை வழங்கியதாகவும், இதனால் கர்நாடக அரசுக்கு ரூ.4 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கில், பணமோசடி தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், சித்தராமையாவுக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமான விபத்து: மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 5 பேர் பலி!

குஜராத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதி மீது ஏர் இந்தியா விமானம் விழுந்து விபத்துக்குள்ளான நிலையில், கடுமையாக சேதமடைந்த விடுதியில் இருந்த ஐந்து மருத்துவ மாணவர்கள் பலியானதாகத் தகவல்கள் தெரிவிக்கின... மேலும் பார்க்க

பெங்களூர் கூட்டநெரிசல்: ஆர்சிபி நிர்வாகி உள்பட 4 பேருக்கு பிணை!

பெங்களூரில் ஆர்சிபி அணியின் வெற்றிப் பேரணியின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் பலியான விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 4 பேருக்கு இடைக்கால பிணை வழங்கப்பட்டுள்ளது.ஐபிஎல் தொடரில் முதல்முறையாக ராயல் சேல... மேலும் பார்க்க

1990 - 2025: இந்தியாவில் நேரிட்ட முக்கிய விமான விபத்துகள்!

குஜராத்தின் ஆமதாபாத்தின் சர்தார் வல்லபாய் பட்டேல் விமான நிலையத்தில் இருந்து போயிங் 787-8 ரக ஏர் இந்தியா விமானம், லண்டனுக்குப் புறப்பட்டுச் சென்ற சில மணித் துளிகளிலேயே விழுந்து நொறுங்கியது. இந்த விமானத... மேலும் பார்க்க

யாரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை: ஆமதாபாத் காவல் ஆணையர்

ஆமதாபாத் விமான விபத்தில் யாரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என ஆமதாபாத் காவல் ஆணையர் ஜி.எஸ். மாலிக் தெரிவித்தார். குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு பிற்பகல் 1.30 மணியளவில் புறப்பட்ட ஏர்... மேலும் பார்க்க

விமானம் எப்படி விபத்துக்குள்ளாகி இருக்கும்? விவரிக்கும் முன்னாள் விமானி!

ஆமதாபாத் விமான விபத்துக்கான சாத்தியக்கூறுகள் குறித்து முன்னாள் விமானி எஹ்சான் காலித் விவரித்துள்ளார்.குஜராத் மாநிலம் ஆமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு இன்று பிற்பகல் புறப்பட்ட ஏர் இந்தியா ... மேலும் பார்க்க

விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்தவரின் அதிர்ச்சிப் பதிவு!

குஜராத் மாநிலம் ஆமதாபாத்திலிருந்து லண்டன் புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளான நிலையில், அதில் பயணித்தவர் ஒருவர் வெளியிட்டிருக்கும் விடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.விபத்தில் சிக்கிய அதே விமானத்... மேலும் பார்க்க