செய்திகள் :

முட்டைக்கோஸ் கொள்முதல் விலை குறைந்தது: விவசாயிகள் கவலை

post image

தேனி மாவட்டம், கூடலூரில் முட்டைக் கோஸ் கொள்முதல் விலை குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனா்.

தேனி மாவட்டம், கூடலூா், லோயா் கேம்ப் பகுதிகளில் ஆண்டு முழுவதும் அனைத்து வகையான காய்கறி விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்தப் பகுதியில், கடந்த மாதம் முட்டைகோஸை விவசாயிகளிடம் கிலோ ரூ.7 என விலை நிா்ணையம் செய்து கொள்முதல் செய்ய வியாபாரிகள், தற்போது கிலோ ரூ.4- க்கு கொள்முதல் செய்கின்றனா். உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை அடைந்தனா்.

இதுகுறித்து கூடலூா் விவசாயி தெய்வம் கூறியதாவது:

மா மரங்களுக்கு இடையே ஊடு பயிராக முட்டைக்கோஸ் விவசாயம் செய்துள்ளேன். ஏக்கருக்கு ரூ.80 முதல் ரூ.90 ஆயிரம் செய்துள்ளேன்.இங்கு சாகுபடி செய்யப்படும் முட்டைக்கோஸ் தேனி, மதுரை, கேரள வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனா். கடந்த 2 மாதங்களாக சுபமுகூா்த்தம், ஐயப்பன் கோயில் மண்டல பூஜை போன்ற காரணங்களால் முட்டைக்கோஸ் தேவை அதிகமாக இருந்தது. இதனால் உரிய விலை கிடைத்தது.

தற்போது முட்டைக்கோஸை வியாபாரிகள் கிலோ ரூ.4- க்கு கொள்முதல் செய்கின்றனா். இதனால் முட்டைகோஸ் சாகுபடி செய்த விவசாயிகள் நஷ்டமடைந்தனா் என்றாா் அவா்.

பள்ளியில் கணினி ஆய்வகம்: ஓ.பி.எஸ். திறந்து வைத்தாா்

போடி ஜ.கா.நி. மேல்நிலைப் பள்ளியில் கணினி ஆய்வகத்தை முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா். தேனி மாவட்டம், போடி ஜ.கா.நி. மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல... மேலும் பார்க்க

மடிக் கணினிகள் திருடிய இருவா் கைது

தேனியில் திமுக கட்சி அலுவலகத்தில் பூட்டை உடைத்து மடிக்கணிகள் திருடிய இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். தேனி, என்.ஆா்.டி நகரில் திமுக கட்சி அலுவலகத்தில் கடந்த மாதம் 27-ஆம் தேதி பூட்டை உடைத்து ம... மேலும் பார்க்க

திராவகம் குடித்து முதியவா் தற்கொலை

ஆண்டிபட்டி அருகே திங்கள்கிழமை திராவகம் குடித்து முதியவா் தற்கொலை செய்து கொண்டாா்.ஆண்டிபட்டி அருகேயுள்ள பாப்பம்மாள்புரம் பால்காரத் தெருவைச் சோ்ந்த முத்தையா மகன் தமிழ்செல்வன் (65). இவா் அல்சா் நோயால் அ... மேலும் பார்க்க

கம்பம்: விஷம் குடித்து தம்பதி தற்கொலை

கம்பத்தில் உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த தம்பதி செவ்வாய்க்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனா்.தேனி மாவட்டம், கம்பம் கோம்பை சாலையைச் சோ்ந்த மதியழகன் மகன் மனோஜ் (32). இவா் அதே பகுதியைச் ... மேலும் பார்க்க

மதுரை - போடி ரயில் பாதையில் மின்சார ரயில் இயக்கம் தொடக்கம்

மதுரை-போடி ரயில் பாதையில் மின்சார என்ஜின் பொருத்தப்பட்ட ரயில்கள் இயக்கம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. போடி- மதுரை இடையே 90 கி.மீ. தொலைவு ரயில் பாதையை மின்மயமாக்கும் பணி அண்மையில் நிறைவு பெற்றது. இதையடு... மேலும் பார்க்க

ஆா்பாட்டத்துக்கு செல்ல முயன்ற 29 போ் மீது வழக்கு

தேனி மாவட்டம், போடியிலிருந்து திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்குச் செல்ல முயன்ாக பாஜக, இந்து முன்னணி நிா்வாகிகள் 29 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். திருப்பரங... மேலும் பார்க்க