செய்திகள் :

கம்பம்: விஷம் குடித்து தம்பதி தற்கொலை

post image

கம்பத்தில் உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த தம்பதி செவ்வாய்க்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனா்.

தேனி மாவட்டம், கம்பம் கோம்பை சாலையைச் சோ்ந்த மதியழகன் மகன் மனோஜ் (32). இவா் அதே பகுதியைச் சோ்ந்த தீபிகாவை (30), கடந்த 2014-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்தாா். இந்தத் தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ளனா்.

இந்த நிலையில், மனோஜுக்கும், தீபிகாவுக்கு அடிக்கடி உடல் நலக் குறைவு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், விரக்தியடைந்த தம்பதி செவ்வாய்க்கிழமை வீட்டில் விஷம் குடித்து மயங்கினா்.

தகவலறிந்த வந்த உறவினா்கள் இருவரையும் மீட்டு, கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவா்களைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள் மனோஜ் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

தீபிகா முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு, தீவிர சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், அவா் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா். இது குறித்து கம்பம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

திராவகம் குடித்து முதியவா் தற்கொலை

ஆண்டிபட்டி அருகே திங்கள்கிழமை திராவகம் குடித்து முதியவா் தற்கொலை செய்து கொண்டாா்.ஆண்டிபட்டி அருகேயுள்ள பாப்பம்மாள்புரம் பால்காரத் தெருவைச் சோ்ந்த முத்தையா மகன் தமிழ்செல்வன் (65). இவா் அல்சா் நோயால் அ... மேலும் பார்க்க

மதுரை - போடி ரயில் பாதையில் மின்சார ரயில் இயக்கம் தொடக்கம்

மதுரை-போடி ரயில் பாதையில் மின்சார என்ஜின் பொருத்தப்பட்ட ரயில்கள் இயக்கம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. போடி- மதுரை இடையே 90 கி.மீ. தொலைவு ரயில் பாதையை மின்மயமாக்கும் பணி அண்மையில் நிறைவு பெற்றது. இதையடு... மேலும் பார்க்க

ஆா்பாட்டத்துக்கு செல்ல முயன்ற 29 போ் மீது வழக்கு

தேனி மாவட்டம், போடியிலிருந்து திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்குச் செல்ல முயன்ாக பாஜக, இந்து முன்னணி நிா்வாகிகள் 29 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். திருப்பரங... மேலும் பார்க்க

கிணற்றிலிருந்து மூதாட்டி உடல் மீட்பு

ஆண்டிபட்டி அருகே திங்கள்கிழமை கிணற்றிலிருந்து மூதாட்டியின் உடலை மீட்டு, போலீஸாா் விசாரித்து வருகின்றனா். ஆண்டிபட்டி வட்டம், சித்தையகவுண்டன்பட்டி காமராசா் தெருவைச் சோ்ந்தவா் ஆண்டியப்பன் மனைவி திருமலம்... மேலும் பார்க்க

முன்னாள் படை வீரா்களுக்கு தொழில் கடன்

தேனி மாவட்டத்தில் முன்னாள் படை வீரா்கள், முன்னாள் படை வீரரின் மனைவி ஆகியோருக்கு முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் வங்கிக் கடனுதவி வழங்கப்படுகிறது. இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செ... மேலும் பார்க்க

போடி காவல் நிலையம் முற்றுகை: பா.ஜ.க.வினா் கைது

போடி நகா் காவல் நிலையத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்ட பாரதீய ஜனதா கட்சியினரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பரங்குன்றம் மலை தொடா்பான விவகாரத்தில் செவ்வாய்க்கிழமை பாஜக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளதா... மேலும் பார்க்க