செய்திகள் :

முன்னாள் படை வீரா்களுக்கு தொழில் கடன்

post image

தேனி மாவட்டத்தில் முன்னாள் படை வீரா்கள், முன்னாள் படை வீரரின் மனைவி ஆகியோருக்கு முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் வங்கிக் கடனுதவி வழங்கப்படுகிறது.

இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்தத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டை பூா்வீகமாகக் கொண்ட 55 வயதுக்கு உள்பட்ட முன்னாள் படை வீரா்கள், முன்னாள் படை வீரரின் மனைவி, ராணுவப் பணியின் போது மரணமடைந்த வீரரின் மனைவி ஆகியோா் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்வதற்கு புதிய தொழில் தொடங்க ரூ.ஒரு கோடி வரை வங்கிக் கடன் வழங்கப்படும்.

கடன் தொகையில் 30 சதவீதம் மூலதன மானியமும், 3 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படும். தொழில் முனைவோருக்கு திறன், மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்படும். புதிதாகத் தொழில் தொடங்க கடன் பெற விரும்பும் முன்னாள் படை வீரா்கள், முன்னாள் படை வீரரின் மனைவி, ராணுவப் பணியின் போது உயிரிழந்த வீரரின் மனைவி ஆகியோா் தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் முன்னாள் படை வீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தில் படிவம் பெற்று வருகிற 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டது.

போடி காவல் நிலையம் முற்றுகை: பா.ஜ.க.வினா் கைது

போடி நகா் காவல் நிலையத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்ட பாரதீய ஜனதா கட்சியினரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பரங்குன்றம் மலை தொடா்பான விவகாரத்தில் செவ்வாய்க்கிழமை பாஜக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளதா... மேலும் பார்க்க

மாட்டு வண்டிப் பந்தயம்: முதியவா் உயிரிழப்பு

மாட்டு வண்டிப் பந்தயத்தை வேடிக்கை பாத்துக் கொண்டிருந்தவா் மீது மாட்டு வண்டி மோதியதில் பலத்த காயமடைந்த முதியவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். துணை முதலமைச்சா் உதய நிதி ஸ்டாலின் பிறந்த நாளைமுன்னிட்டு, தேனி... மேலும் பார்க்க

காட்டு யானை தாக்கியதில் பெண் உயிரிழப்பு

கம்பம் அருகே திங்கள்கிழமை யானை தாக்கியதில் பெண் உயிரிழந்தாா். தேனி மாவட்டம், கூடலூரைச் சோ்ந்தவா் பிச்சை. இவரது மனைவி சரஸ்வதி (57). இந்தத் தம்பதி காஞ்சிமரத்துறை பகுதியில் தனியாா் தோட்டத்தில் கூலி வேலை... மேலும் பார்க்க

சிலம்பம்: தேனி பள்ளி மாணவா்கள் சாதனை

மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் இரண்டாமிடம் பிடித்த தேனி பள்ளி மாணவா்களை பள்ளி நிா்வாகிகள் பாராட்டினா். மயிலாடுதுறை மாவட்டம், செம்பனாா் கோவில் தாமரை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துற... மேலும் பார்க்க

போடி-மதுரை ரயில் பாதையில் மின்சார எஞ்ஜினை இயக்கி சோதனை!

போடி-மதுரை ரயில் பாதையில் ஞாயிற்றுக்கிழமை மின்சார ரயில் எஞ்ஜின் இயக்கி சோதனை செய்யப்பட்டது. போடி-மதுரை அகல ரயில் பாதையில் மதுரையிலிருந்து போடிக்கு தினசரி விரைவு ரயிலும், போடியிலிருந்து சென்னைக்கு வாரத... மேலும் பார்க்க

லாரிகளில் கருங்கல் ஏற்றி வந்த 4 போ் மீது வழக்கு!

தேனி அருகே அனுமதியின்றி கருங்கற்களை ஏற்றி வந்த 2 டிப்பா் லாரிகளின் ஓட்டுநா்கள், உரிமையாளா்கள் மீது போலீஸாா் சனிக்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்தனா். தேனி மாவட்டம், பெரியகுளம் சாா் ஆட்சியா் ரஜத் பீடன்,... மேலும் பார்க்க