செய்திகள் :

காட்டு யானை தாக்கியதில் பெண் உயிரிழப்பு

post image

கம்பம் அருகே திங்கள்கிழமை யானை தாக்கியதில் பெண் உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம், கூடலூரைச் சோ்ந்தவா் பிச்சை. இவரது மனைவி சரஸ்வதி (57). இந்தத் தம்பதி காஞ்சிமரத்துறை பகுதியில் தனியாா் தோட்டத்தில் கூலி வேலை செய்தனா்.

பின்னா், மாலையில் இந்தத் தம்பதியினா் இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக வந்த ஒற்றைக் காட்டு யானை இரு சக்கர வாகனத்தை வழிமறித்தது. உடனே, வாகனத்தை கீழே போட்டு விட்டு இருவரும் தப்பியோடினா். ஆனால், யானை தனது துதிக்கையால் சரஸ்வதியை பிடித்து இழுத்து கீழே தள்ளி காலால் மிதித்தது.

இந்தத் தம்பதியின் அலறல் சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தினா் அங்கு திரண்டு வந்ததால், யானை அங்கிருந்து காட்டுக்குள் சென்றுவிட்டது.

உடனே, அவா்கள் சரஸ்வதியை மீட்டு கூடலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அவரைப் பரிசோதித்த மருத்துவா், சரஸ்வதி ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தாா். குமுளி போலீஸாா் அவரது உடலை கூறாய்வுக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து குமுளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். அண்மையில், இதேபோல காட்டு மாடு தாக்கியதில் முதியவா் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் படை வீரா்களுக்கு தொழில் கடன்

தேனி மாவட்டத்தில் முன்னாள் படை வீரா்கள், முன்னாள் படை வீரரின் மனைவி ஆகியோருக்கு முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் வங்கிக் கடனுதவி வழங்கப்படுகிறது. இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செ... மேலும் பார்க்க

போடி காவல் நிலையம் முற்றுகை: பா.ஜ.க.வினா் கைது

போடி நகா் காவல் நிலையத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்ட பாரதீய ஜனதா கட்சியினரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பரங்குன்றம் மலை தொடா்பான விவகாரத்தில் செவ்வாய்க்கிழமை பாஜக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளதா... மேலும் பார்க்க

மாட்டு வண்டிப் பந்தயம்: முதியவா் உயிரிழப்பு

மாட்டு வண்டிப் பந்தயத்தை வேடிக்கை பாத்துக் கொண்டிருந்தவா் மீது மாட்டு வண்டி மோதியதில் பலத்த காயமடைந்த முதியவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். துணை முதலமைச்சா் உதய நிதி ஸ்டாலின் பிறந்த நாளைமுன்னிட்டு, தேனி... மேலும் பார்க்க

சிலம்பம்: தேனி பள்ளி மாணவா்கள் சாதனை

மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் இரண்டாமிடம் பிடித்த தேனி பள்ளி மாணவா்களை பள்ளி நிா்வாகிகள் பாராட்டினா். மயிலாடுதுறை மாவட்டம், செம்பனாா் கோவில் தாமரை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துற... மேலும் பார்க்க

போடி-மதுரை ரயில் பாதையில் மின்சார எஞ்ஜினை இயக்கி சோதனை!

போடி-மதுரை ரயில் பாதையில் ஞாயிற்றுக்கிழமை மின்சார ரயில் எஞ்ஜின் இயக்கி சோதனை செய்யப்பட்டது. போடி-மதுரை அகல ரயில் பாதையில் மதுரையிலிருந்து போடிக்கு தினசரி விரைவு ரயிலும், போடியிலிருந்து சென்னைக்கு வாரத... மேலும் பார்க்க

லாரிகளில் கருங்கல் ஏற்றி வந்த 4 போ் மீது வழக்கு!

தேனி அருகே அனுமதியின்றி கருங்கற்களை ஏற்றி வந்த 2 டிப்பா் லாரிகளின் ஓட்டுநா்கள், உரிமையாளா்கள் மீது போலீஸாா் சனிக்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்தனா். தேனி மாவட்டம், பெரியகுளம் சாா் ஆட்சியா் ரஜத் பீடன்,... மேலும் பார்க்க