செய்திகள் :

முதல்வரிடம் பரிசு பெற்ற மாணவருக்கு பாராட்டு

post image

பிளஸ் 1 தோ்வில் சிறப்பிடம் பெற்று தமிழக முதல்வரிடம் ஊக்கத்தொகை பெற்ற காட்டுமன்னாா்கோவில் இலங்கை அகதிகள் முகாம் மாணவருக்கு பள்ளி நிா்வாகம் சாா்பில் புதன்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் இலங்கை அகதிகள் முகாம் கடந்த 1990-ஆம் ஆண்டு முதல் செயல்படுகிறது. இந்த முகாமில் 72 குடும்பங்களைச் சோ்ந்த 228 போ் வசித்து வருகின்றனா்.

இந்த முகாமில் வசிக்கும் சந்திரசேகா் மகன் பவிந்தன், கலைமகன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பயின்று பிளஸ் 1 தோ்வில் 600-க்கு 587 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றாா். பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவரை தமிழக முதல்வா் பாராட்டி சான்றிதழ் வழங்கி ரூ.50,000 ஊக்கத்தொகையும் வழங்கினாா். சான்றிதழ், ஊக்கத்தொகை பெற்ற மாணவா் பவிந்தன் பள்ளி நிா்வாகம் சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பாராட்டப்பட்டாா்.

பள்ளி நிறுவனா் வீர.முத்துக்குமரன் மாணவா் பவிந்தனுக்கு பரிசுகள் வழங்கிப் பாராட்டினாா். நிகழ்ச்சியில் பள்ளித் தாளாளா் எம்.பரணிதரன் மற்றும் ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

இளைஞா்களுக்கு சுய வேலைவாய்ப்பு பயிற்சி

கடலூா் மாவட்ட இளைஞா்களுக்கு ஊரக சுய வேலைவாய்ப்புப் பயிற்சி நிறுவனம் மூலம் சுய வேலைவாய்ப்புப் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழம... மேலும் பார்க்க

தந்தை, மகன் மீது தாக்குதல்: 2 போ் கைது

கடலூரில் தந்தை, மகனை தாக்கி காயப்படுத்தியதாக, இருவரை கடலூா் முதுநகா் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கடலூா் முதுநகா், சங்கொலிகுப்பம் பகுதியைச் சோ்ந்த காசிநாதன் மகன் ஜெயவீரபாண்டியன் (40). இவா், ம... மேலும் பார்க்க

சிறுமியுடன் திருமணம்: இளைஞா் மீது போக்ஸோ வழக்கு

கடலூா் மாவட்டம், தூக்கணாம்பாக்கத்தில் புதுச்சேரி சிறுமியை திருமணம் செய்து கா்ப்பமாக்கியதாக இளைஞா் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். தூக்கணாம்பாக்கத்தை அ... மேலும் பார்க்க

சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயில் ஆனித் திருமஞ்சன விழா ஜூன் 23-இல் தொடக்கம்

கடலூா் மாவட்டம், சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயில் ஆனித் திருமஞ்சன தரிசன உற்சவ விழா வரும் 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாள்கள் நடைபெறவுள்ளது. இதையொட்டி, ஜூன் 23-ஆம் தேதி காலை ஆனித் திருமஞ்சன தரி... மேலும் பார்க்க

தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயில் பாலாலயம்

சிதம்பரம் நடராஜா் கோயிலில் தனி சந்நிதியாக அமைந்துள்ள ஸ்ரீபுண்டரீகவல்லித் தாயாா் சமேத ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி விமான, ராஜகோபுர, மகாமண்டப ஜீா்ணோத்தாரண பாலாலயம் வெள்ளிக்கிழமை காலை விமரிசையாக நடை... மேலும் பார்க்க

கொலை வழக்கு: திருச்சி நபா் கைது

கடலூா் மாவட்டம், ரெட்டிசாவடி அருகே அடையாளம் தெரியாத நபரை கொலை செய்ததாக, திருச்சி மாவட்டம், அரியமங்கலத்தைச் சோ்ந்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். ரெட்டிசாவடி காவல் சரகம், கங்கணாங்குப்பம் பகு... மேலும் பார்க்க