செய்திகள் :

முதல்வர் ரங்கசாமி ராஜிநாமா செய்தால் ஜெயலில் இருப்பார்: நாராயணசாமி

post image

முதல்வர் ரங்கசாமி ராஜிநாமா செய்தால் அவர் ஜெயலில் இருப்பார் என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி, சுகாதாரத் துறை இயக்குனராக செவ்வேல் நியமிக்கப்பட்டது விதிமுறைகளின் படி ஆளுநர் செய்திருக்கிறார், இது சரியானது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரங்கசாமி போர் கொடி தூக்கியிருப்பது ஏன் என கேள்வி எழுப்பினார்.

சுகாதாரத்துறை இயக்குனர் பதவியை நிரப்புவதற்கு ரூ.50 லட்சம் வரை முதல்வர் அலுவலக ஊழியர்களால் பேரம் பேசப்பட்டு இருக்கிறது. ஆனால் இதற்கெல்லாம் விளக்கம் அளிக்காமல் முதல்வர் தனது பதவியை ராஜினாமா செய்யப் போகிறேன் என்று துணைநிலை ஆளுநரை மிரட்டும் வகையில் ரங்கசாமி இறங்கினார். ஆனால் அது பிசுபிசுத்து போய்விட்டது.

முதல்வர் அனுப்பிய கோப்பிற்கு துனைநிலை ஆளுநர் உண்மையிலேயே அனுமதி மறுத்துவிட்டார் என்றால் ரங்கசாமி ஏன் தனது பதிவை ராஜினாமா செய்யவில்லை என கேள்வி எழுப்பிய நாராயணசாமி, ஒரு நிமிடம் கூட முதல்வர் பதவியை ரங்கசாமி எப்பொழுதும் விட்டுக் கொடுக்க மாட்டார், பதவி நாற்காலிக்காக அவர் எதை வேண்டுமானாலும் செய்வார்.

இவருடைய மிரட்டல் எல்லாம் துனை நிலை ஆளுநர் கைலாஷ் நாதனிடம் செல்லாது என்றும், ராஜிநாமா செய்யப் போவதாக கூறிய ரங்கசாமி இப்போது துணைநிலை ஆளுநரிடம் சரண்டர் ஆகிவிட்டார் என்று கூறினார். மேலும் தேர்தல் சமயத்தில் மட்டுமே ரங்கசாமிக்கு மாநில அந்தஸ்து என்ற ஞானம் பிறக்கும் என்ற நாராயணசாமி, புதுச்சேரி தேசிய ஜனநாக கூட்டணியில் முதல்வர் ரங்கசாமிதான் மாப்பிள்ளை, ஆனால் போடுகின்ற சட்ட பாஜகவினுருடையது.

முதல்வர் ரங்கசாமி ராஜினாமா செய்தால் அவர் ஜெயலில் இருப்பார். அவரை பாஜக சிறையில் தள்ளும். அவர் மீது 7 ஊழல் குற்றசாட்டுகள் உள்ளதாக குறிப்பிட்ட நாராயணசாமி, 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, என்.ஆர்.காங்கிரசைச் சேர்ந்தவர்கள் ஒருவர் கூட ஜெயிக்கமாட்டார்கள் என்று உறுதிப்பட தெரிவித்தார்.

Narayanasamy has said that if Chief Minister Rangasamy resigns, he will be in jail.

வெள்ளை சட்டையுடன் 4 ரீல்ஸ் போட்டால் தலைவனா? யாரைச் சொல்கிறார் அண்ணாமலை?

ஒரு தலைவனுக்கு பழிவாங்கும் நோக்கு இருக்கக் கூடாது என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.சென்னை உத்தண்டியில் இன்று நடைபெற்ற அரசியல் பயிலரங்கம் நிகழ்ச்சியில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கலந்துகொண... மேலும் பார்க்க

2026-ல் திமுக கூட்டணி வீட்டிற்கு அனுப்பப்படும்: நயினார் நாகேந்திரன்

2026-ல் திமுக கூட்டணி வீட்டிற்கு அனுப்பப்படும் என்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.மதுரையில் இன்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசுகையில், தமிழகத்தில் ஒரு தவறு நடைபெறுகிறது... மேலும் பார்க்க

காவலாளி அஜித்குமார் மரண வழக்கு- சிபிஐ வழக்குப்பதிவு

திருப்புவனம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமாா், அவரது சகோதரா் நவ... மேலும் பார்க்க

அஜித்குமாருக்காக விஜய் போராட்டம்! 10,000 பேருடன் தவெக முதல் போராட்டம்!

சென்னையில் நாளை நடைபெறவுள்ள தவெகவின் முதல் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சித் தலைவர் விஜயும் கலந்துகொள்ள உள்ளார்.மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் காவல்துறையினரின் அராஜகத்துக்கு எதிராக பல... மேலும் பார்க்க

விசாரணையில் தொய்வு: ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை கோவை ஐஜி அலுவலகத்தில் மனு

கோவை : ரிதன்யா தற்கொலை வழக்கு விசாரணை தொய்வாக நடப்பதாகக் கூறி, அவரது தந்தை அண்ணாதுரை, கோவை ஐ.ஜி. அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார்.புதுமணப் பெண் ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் விசாரணை தொய்வாக இரு... மேலும் பார்க்க

தமிழக பள்ளிகளிலும் இனி கடைசி பெஞ்ச் கிடையாது!

கேரளத்தைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளிலும் மாணவர்களின் 'ப' வடிவில் உட்கார வைக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.இதுதொடர்பாக அனைத்துப் பள்ளிகளுக்கும் மாவட்ட கல்வி அ... மேலும் பார்க்க