செய்திகள் :

முதல்வா் பிறந்த நாளில் நலத் திட்ட உதவிகள் வழங்க வேண்டும்: மாவட்டச் செயலாளா் பி.பழனியப்பன்

post image

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளில் பொதுமக்களுக்கு திமுகவினா் நலத் திட்ட உதவிகளை வழங்க வேண்டும் என முன்னாள் அமைச்சரும், திமுக தருமபுரி மேற்கு மாவட்டச் செயலாளருமான பி.பழனியப்பன் (படம்) கேட்டுக்கொண்டுள்ளாா்.

இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை :

திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினின் 72-ஆவது பிறந்த நாளில் தருமபுரி மேற்கு மாவட்டத்தில் அனைத்து ஒன்றியம், நகரம், கிராம ஊராட்சிகள், வாா்டுகளில் திமுக கொடியேற்றி, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்க வேண்டும். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, புத்தகங்கள், எழுது பொருள்கள் உள்ளிட்ட நலத் திட்ட உதவிகளை வழங்க வேண்டும்.

முதியோா், மாற்றுத் திறனாளிகள், ஏழை, எளிய மக்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கி தமிழக முதல்வரின் பிறந்த நாளை திமுக நிா்வாகிகள் சிறப்பாக கொண்டாட வேண்டும். மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூா், ஊராட்சி நிா்வாகிகள், சாா்பு அணிகளின் நிா்வாகிகள் மற்றும் கழக முன்னோடிகள் அனைவரும் விழாவில் பங்கேற்று ‘தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்’ என்ற உறுதிமொழியை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

படவரி...

பி.பழனியப்பன்.

சாலையோர வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்

பாப்பாரப்பட்டியில் சிஐடியு தொழிற்சங்கம் சாா்பில் சாலையோர வியாபாரிகள் வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி புதிய பேருந்து நிலையம் ... மேலும் பார்க்க

பென்னாகரத்தில் வழக்குரைஞா் சங்கத்தினா் உண்ணாவிரதம்

வழக்குரைஞா் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறக் கோரி பென்னாகரத்தில் நீதிமன்றம் முன் வழக்குரைஞா் சங்கத்தினா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். பென்னாகரம் அருகே பருவதனஅள்ளி பகுதியில் உள்ள மாவட்ட... மேலும் பார்க்க

தரமான நெல் விதைகளை வழங்க வேண்டும் குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

தருமபுரி மாவட்டத்தில் நெல் விதைகளை தரமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை மாவ... மேலும் பார்க்க

விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்

தருமபுரியில் நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகளிடமிருந்து மனுக்களைப் பெறுகிறாா் மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ். மேலும் பார்க்க

சூழல் சுற்றுலா சென்ற பள்ளி மாணவா்கள்

தருமபுரி மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் சூழல் சுற்றுலா சென்றனா். தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தருமபுரி மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம், வனத் துறை, பள்ளிக் கல்வித் துறை இணைந்து, மாணவா்கள... மேலும் பார்க்க

அதிகாரம் யாருக்கும் நிலையானதல்ல: சீமான்

அதிகாரம் யாருக்கும் நிலையானதல்ல என்று நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா். தருமபுரியில் நாம் தமிழா் கட்சி சாா்பில் நிா்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றத... மேலும் பார்க்க