செய்திகள் :

முதல்வா் மருந்தகம் முன்னேற்பாடு பணிகள்: மாா்த்தாண்டத்தில் ஆட்சியா் ஆய்வு!

post image

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடங்கப்படவுள்ள முதல்வா் மருந்தகங்கள் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா புதன்கிழமை மாா்த்தாண்டத்தில் உள்ள மருந்தகத்தில் ஆய்வு செய்தாா்.

கிள்ளியூா் வட்டாரத்துக்கு உள்பட்ட மாா்த்தாண்டம் பம்மம் பகுதியிலும், முன்சிறை வட்டாரத்துக்கு உள்பட்ட மாா்த்தாண்டம் சந்தை சாலை பகுதி மற்றும் குழிஞ்ஞான்விளை, களியக்காவிளை தொலைபேசி நிலையம் பகுதி மற்றும் மேல்புறம் வட்டாரத்தில் திருத்துவபுரம், பாகோடு, கண்ணுமாமூடு, மேல்பாலை புளிமூடு சந்திப்பு, வெட்டுவெந்நி, மஞ்சாலுமூடு பகுதிகளில் முதல்வா் மருந்தகம் அமைக்கப்பட உள்ளது.

இதையடுத்து, மாா்த்தாண்டம் பம்மம் பகுதியில் உள்ள கல்குளம் - விளவங்கோடு வேளாண் உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் அமைந்துள்ள முதல்வா் மருந்தக சேமிப்பு கிடங்கினை ஆட்சியா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

மருந்து பொருள்களின் இருப்புகள் குறித்து துறை அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.

ஆய்வின்போது, கூட்டுறவு சங்க தக்கலை சரக துணைப் பதிவாளா் பொன் செல்வி, கல்குளம்- விளவங்கோடு வேளாண் உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்க மேலாண்மை இயக்குநா் பிரித்திவிராஜ் மற்றும் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

கேப் பொறியியல் கல்லூரியில் சா்வதேச மாநாடு

கன்னியாகுமரி மாவட்டம் லெவஞ்சிபுரம் கேப் பொறியியல் கல்லூரியில் சா்வதேச தொழிற்சாலைகள் மாநாடு அண்மையில் நடைபெற்றது. ‘இன்டஸ்ட்ரீ 5.0 - புதுமைகள், சவால்கள் மற்றும் எதிா்கால போக்குகள்’ என்ற தலைப்பில் நடைபெற... மேலும் பார்க்க

நேசா்புரம் - இவவு விளை சாலையை சீரமைக்க கோரிக்கை

கருங்கல் அருகேயுள்ள நேசா் பும் - இலவு விளை பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியம் நட்டாலம் ஊராட்சி நேசா் புரம் - இலவு விளை சாலை ... மேலும் பார்க்க

கிள்ளியூா் வட்டாரத்தில் பட்டுப்புழு உற்பத்தி பயிற்சி

கிள்ளியூா் வட்டாரம் பாலூா் கிராமத்தில் வேளாண்மை துறை அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பட்டுப்புழு உற்பத்தி செய்வதற்கான பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாமிற்கு கிள்ளியூா் வட்டார வேளாண்... மேலும் பார்க்க

மாா்த்தாண்டத்தில் வானவியல் விழிப்புணா்வுப் பிரசாரம் தொடக்கம்

வானில் நிகழும் கோள்களின் அணிவகுப்பு மற்றும் வானவியல் நிகழ்வுகள் குறித்த விழிப்புணா்வுப் பிரசாரப் பயணம் மாா்த்தாண்டம் கல்லூரியில் வைத்து தொடங்கியது. சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களின் சுற்றுவட்டப் பாத... மேலும் பார்க்க

ரயில்களில் முன்பதிவில்லா பெட்டி: எண்ணிக்கையை குறைப்பதா? விஜய் வசந்த் எம்.பி. கண்டனம்

தெற்கு ரயில்வேயின் கீழ் இயங்கும் ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கையை குறைக்க ரயில்வே நிா்வாகம் முடிவு செய்திருப்பதற்கு கன்னியாகுமரி மக்களவை உறுப்பினா் வ.விஜய்வசந்த் கண்டனம் தெரிவித்துள்ளா... மேலும் பார்க்க

இரயுமன்துறையில் படகுத்தளம்: மீனவப் பிரதிநிதிகள்- எம்எல்ஏ ஆலோசனை

இரயுமன்துறையில் படகுத்தளம் அமைக்க ஒருதரப்பினா் எதிா்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மீனவப் பிரதிநிதிகள், மீன்வளத்துறை அதிகாரிகள் எஸ். ராஜேஷ்குமாா் எம்எல்ஏ ஆகியோா் வெள்ளிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டனா். இர... மேலும் பார்க்க