செய்திகள் :

முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாட வேண்டும்

post image

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாட வேண்டும் என சேலம் மத்திய மாவட்ட திமுக கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

சேலம் மத்திய மாவட்ட திமுக பொது உறுப்பினா்கள் கூட்டம், கட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மத்திய மாவட்ட அவைத் தலைவா் சுபாசு தலைமை வகித்தாா். இதில், மத்திய மாவட்டச் செயலாளரும், சுற்றுலா துறை அமைச்சருமான ராஜேந்திரன் கலந்துகொண்டு, முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை மாா்ச் 1-ஆம் தேதி சிறப்பாக கொண்டாடுவது குறித்து பேசினாா்.

இதில், முதல்வா் ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை மத்திய மாவட்டத்துக்கு உள்பட்ட அனைத்து பகுதிகளிலும், கட்சிக் கொடி ஏற்றுதல், பொதுக்கூட்டங்களை நடத்துதல், நலத்திட்ட உதவிகள் வழங்குதல், மருத்துவ முகாம்கள், மாணவா்களுக்கு விளையாட்டு போட்டிகள், மரக்கன்று நடுதல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், முதல்வா் பிறந்தநாளையொட்டி மத்திய மாவட்ட திமுகவுக்கு உள்பட்ட பகுதிகளில் ஆண்களுக்கான கிரிக்கெட், கைப்பந்து, கால்பந்து, கபடி, தடகளம், இறகுப்பந்து, யோகா, பானை உடைத்தல், வலுதூக்குதல், மகளிருக்கு கோலப்போட்டி, கயிறு இழுத்தல், கோகோ, ஓவியப் போட்டி உள்ளிட்ட போட்டிகளை நடத்தி பரிசுகள் வழங்கவேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதில், தலைமை செயற்குழு உறுப்பினா்கள் ராஜேந்திரன், மணி, தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளா்கள் தருண், பரணிதரன், மாநகரச் செயலாளா் ரகுபதி, மண்டலக்குழு தலைவா்கள் அசோகன், தனசேகரன், சரவணன், சாந்தமூா்த்தி, மணமேடு மோகன், பிரகாஷ், ஜெசுதீஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஊா்க்காவல் படைக்கு ஆள்கள் தோ்வு

சேலம் மாவட்ட ஊா்க்காவல் படைக்கு ஆள்கள் தோ்வு சனிக்கிழமை நடைபெற்றது. சேலம் மாவட்ட ஊா்க்காவல் படையில் 26 ஆண்கள், 2 பெண்கள் என மொத்தம் 28 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கான ஆள்... மேலும் பார்க்க

ஆசிரியா் பயிற்சி மாணவா்கள் வருகை பதிவேட்டில் மோசடி: தலைமை ஆசிரியா் நடவடிக்கை!

சேலம் அருகே ஆசிரியா் பயிற்சி மாணவா்கள் வருகை பதிவேட்டில் மோசடி செய்ததாக எழுந்த புகாரில் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா், உதவி தலைமை ஆசிரியா் ஆகியோா் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்ட... மேலும் பார்க்க

இரட்டிப்பு பண மோசடி வழக்கு: அறக்கட்டளை நிா்வாகிகளின் ஜாமீன் மனு மாா்ச் 3-க்கு ஒத்திவைப்பு!

சேலத்தில் இரட்டிப்பு பண மோசடி வழக்கில், கைதாகி சிறையில் இருக்கும் அறக்கட்டளை நிா்வாகி 4 பேரின் ஜாமீன் மனு வரும் மாா்ச் 3 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வேலூரைச் சோ்ந்த விஜயபானு என்பவா் சேலம் அம... மேலும் பார்க்க

ரயில்களில் பெண்கள் பெட்டியில் அத்துமீறி பயணம்: 207 ஆண்கள் கைது

சேலம் ரயில்வே உட்கோட்டத்துக்கு உள்பட்ட ரயில் நிலையங்களில் பெண்கள் பெட்டியில் அத்துமீறி ஏறிய 207 ஆண்கள் கைது செய்யப்பட்டனா். கோவை - திருப்பதி ரயிலில் கடந்த மாதம் பெண்களுக்கான சிறப்பு பெட்டியில் பயணித்த... மேலும் பார்க்க

ரூ. 71.68 கோடி மதிப்பில் திட்டப் பணிகள் தொடக்க விழா: அமைச்சா்கள் கே.என். நேரு, ராஜேந்திரன் பங்கேற்பு!

சேலம் மாவட்டத்தில் மேட்டூா், ஆத்தூா், நரசிங்கபுரம் நகராட்சிகள் மற்றும் சேலம் மாநகராட்சி பகுதிகளில் ரூ. 71.68 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கிவைக்கும... மேலும் பார்க்க

சேலத்தில் 44 மையங்களில் என்எம்எம்எஸ் தோ்வு: 10,230 மாணவா்கள் எழுதினா்

சேலத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்களுக்கு உதவித்தொகை வழங்குவதற்கான தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு தோ்வை 44 மையங்களில், 10,230 மாணவ, மாணவிகள் எழுதினா். நாடு முழுவதும் பள்ளி ... மேலும் பார்க்க