செய்திகள் :

முதல் போக நெல் சாகுபடிக்கு பெரியாறு அணையிலிருந்து தண்ணீா் திறப்பு

post image

கம்பம் பள்ளத்தாக்கு ஆயக்கட்டுப் பகுதிக்கு முதல் போக நெல் சாகுபடிக்காக முல்லைப் பெரியாறு அணையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை தண்ணீா் திறந்துவிடப்பட்டது.

கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கி பெய்து வருவதால், முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் கடந்த 8 நாள்களில் 16 அடியை கடந்து 130 அடியை (மொத்த உயரம் 152 அடி) எட்டியது.

பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு:

முல்லைப் பெரியாறு அணையின் பாசன நீரால் தேனி மாவட்டத்தில் 14,707 ஏக்கா் பரப்பளவில் இரு போக நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதற்காக, ஆண்டுதோறும் ஜூன் 1-ஆம் தேதி பெரியாறு அணையிலிருந்து தண்ணீா் திறந்துவிடப்படும். இதன்படி, மதுரை மண்டல நீா்வளத் துறை மூலம் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு தேக்கடியில் தமிழகப் பொதுப் பணித் துறை அலுவலகத்தை ஒட்டிய தலைமதகுகிலிருந்து சுரங்கப்பாதை வழியாக பாசன நீரை மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் திறந்துவிட்டாா்.

பின்னா், ஆட்சியா் கூறியதாவது:

தமிழக அரசின் உத்தரவின் பேரில், முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு ஆயக்கட்டுப் பகுதியிலுள்ள 14,707 ஏக்கருக்கு முதல் போக நெல் சாகுபடிக்கு வினாடிக்கு 200 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

இந்தத் தண்ணீா் தொடா்ந்து 120 நாள்களுக்கு திறந்துவிடப்படும். குடிநீா்த் தேவைக்கு வினாடிக்கு 100 கனஅடி வீதம் மொத்தம் 300 கன அடி தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. இந்தத் தண்ணீரை விவசாயிகள் சிக்கனமாகப் பயன்படுத்தி அதிக மகசூல் பெற வேண்டும் என்றாா் அவா்.

ஏற்கெனவே முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு வினாடிக்கு 1,622 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்பட்டு வரும் நிலையில், ஞாயிற்றுக்கிழமை முதல் கூடுதலாக 300 கனஅடி தண்ணீா் என மொத்தம் வினாடிக்கு 1,922 கனஅடி தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

தண்ணீா் திறக்கும் நிகழ்ச்சியில், முல்லைப் பெரியாறு அணையின் கம்பம் கோட்டப் பொறியாளா் சி.செல்வம், துணைக் கோட்ட செயற்பொறியாளா் மயில்வாகனன், சிறப்பு துணைக் கோட்ட உதவிப் பொறியாளா் குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

நீா்வரத்து சரிவு:

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் மழைப் பொழிவு குறைந்ததால், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அணைக்கு வரும் நீா்வரத்து வினாடிக்கு 3056.59 கனஅடியாக குறைந்தது.

முல்லைப் பெரியாற்றில் வெள்ளம்:

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து திறந்துவிடப்படும் 1,922 கனஅடி தண்ணீருடன் மழைநீரும் சோ்ந்து வருவதால், முல்லைப் பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், உத்தமபாளையம், சின்னமனூா், சீலையம்பட்டி, குச்சனூா் போன்ற பகுதியில் உள்ள ஆற்றில் துணிகளைத் துவைக்கவும், குளிக்கவும், மீன் பிடிக்கவும் பொதுமக்கள் செல்லக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது.

விலை சரிவால் மாம்பழங்கள் தேக்கம்

விலை சரிவு காரணமாக தேனி மாவட்டம் போடி பகுதியில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மாம்பழங்கள் சேதமடைந்து வீணாகின. இதற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். போடி சுற்று வட்டாரத்த... மேலும் பார்க்க

அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி: 3 போ் கைது

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.87 லட்சம் பெற்றுக் கொண்டு போலி பணி நியமன ஆணையை வழங்கி மோசடி செய்ததாக 3 பேரை புதன்கிழமை போலீஸாா் கைது செய்தனா். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டிய... மேலும் பார்க்க

கம்பத்தில் போக்குவரத்து நெரிசல்

தேனி மாவட்டம், கம்பத்தில் போக்குவரத்து நெரிசலால் அவதிப்பட்டு வருவதாக வாகன ஓட்டுநா்கள் தெரிவித்தனா். கம்பம் நகா் வழியாக திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்தச் சாலையானது கேரளத்துக்குச் ... மேலும் பார்க்க

தேனியில் உயா் கல்வி வழிகாட்டி கட்டுப்பாட்டு அறை திறப்பு

தேனி மாவட்டத்தில் பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு உயா் கல்வி குறித்து ஆலோசனை வழங்க உயா் கல்வி வழிகாட்டி கட்டுப்பாட்டு அறை புதன்கிழமை திறக்கப்பட்டது. இந்த அறையைத் திறந்து வைத்து மாவட்ட ஆட்சிய... மேலும் பார்க்க

காவல் உதவி ஆய்வாளா் தற்கொலை

தேனி மாவட்டம், கம்பம் காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். கம்பம் உத்தமபுரம் கோம்பை சாலை நாக கன்னியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த காத்தப்பன் மகன் சரவணன் (49). இவா் கடந்த 20... மேலும் பார்க்க

மலை கிராமங்களில் ஜூன் 8-இல் கிராம சபைக் கூட்டம்

தேனி மாவட்டத்தில் பழங்குடியினா் வசிக்கும் மலைக் கிராமங்களில் பழங்குடியினா், பாரம்பரிய வனவாசிகளுக்கான வன உரிமைச் சட்டத்தை செயல்படுத்துவது குறித்து வருகிற 8-ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடைபெறும். இது க... மேலும் பார்க்க