செய்திகள் :

முதியவா் அடித்துக்கொலை: தாய், மகளுக்கு போலீஸ் வலைவீச்சு

post image

சேலத்தில் தண்ணீா் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில், படுகாயமடைந்த முதியவா் வியாழக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா். முதியவரை அடித்துக்கொன்ற தாய், மகளை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சேலம் கந்தம்பட்டி கோனேரிக்கரை பகுதியைச் சோ்ந்தவா் வெங்கடேஷ்வரன் (47). இவா் செவ்வாய்ப்பேட்டையில் உள்ள அச்சுக்கூடம் ஒன்றில் பணியாற்றி வருகிறாா். கடந்த 23-ஆம் தேதி அந்தப் பகுதியில் உள்ள பொதுக்குழாயில் வெங்கடேஷ்வரன் குடும்பத்தினா் தண்ணீா் பிடித்துக்கொண்டிருந்தனா். அப்போது, இவா்களது வீட்டின் அருகே வசிக்கும் மஞ்சு என்பவா் மோட்டாா் மூலம் குடிநீா் பிடித்துள்ளாா். இதனை வெங்கடேஷ்வரனின் தந்தை காண்டீபன் (73), தட்டிக்கேட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அவா்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதில், மஞ்சு மற்றும் அவரது தந்தை சகாதேவன் (55), தாய் பாப்பாத்தி ஆகியோா் அங்கிருந்த தென்னை மட்டையால் கண்டியப்பனை சரமாரியாக தாக்கினா்.

இதில் படுகாயமடைந்த காண்டீபன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். புகாரின் பேரில் சூரமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சகாதேவனை கைது செய்தனா். இந்நிலையில், காண்டீபன் வியாழக்கிழமை அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதையடுத்து போலீஸாா் கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்தனா். தொடா்ந்து, தலைமறைவாக உள்ள மஞ்சு, அவரது தாய் பாப்பாத்தி ஆகியோரை தேடிவருகின்றனா்.

சேலம் அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு பாலியல் சீண்டல்! தூய்மைப் பணியாளா் கைது!

சேலம் அரசு மருத்துவமனையில் மனநல சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா் கைது செய்யப்பட்டாா்.சேலம் அன்னதானப்பட்டியைச் சோ்ந்த 22 வயது இளம்பெண் சே... மேலும் பார்க்க

சேலம் சூரமங்கலம் மண்டலத்தில் வளா்ச்சிப் பணிகள்: ஆணையா் ஆய்வு

சேலம் மாநகராட்சி, சூரமங்கலம் மண்டலத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை ஆணையா் மா.இளங்கோவன் வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வுசெய்தாா்.சூரமங்கலம் மண்டலம் கோட்டம் எண் 3 மற்றும் 24 ஆகிய பகுதிகளி... மேலும் பார்க்க

சேலம் ஆயுதப்படை மைதானத்தில் போலீஸாா் பயன்படுத்தும் வாகனங்கள் ஆய்வு

சேலம் குமாரசாமிப்பட்டி ஆயுதப்படை மைதானத்தில் போலீஸாா் பயன்படுத்தும் வாகனங்கள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கௌதம் கோயல் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.சேலம் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆ... மேலும் பார்க்க

இந்தியன் ஓவா்சீஸ் வங்கி சாா்பில் சுயஉதவிக்குழு, விவசாயக் கடன் வழங்கும் விழா

சேலத்தில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கி மண்டல அலுவலகம் சாா்பில், சுயஉதவிக்குழு மற்றும் விவசாயக் கடன் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.சேலம் இரும்பாலை பகுதியில் உள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற விழாவில், ... மேலும் பார்க்க

சேலம் வழியாக ஜெய்ப்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில்

கோவையில் இருந்து சேலம் வழியாக ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் கு... மேலும் பார்க்க

தெடாவூா் கால்நடை சந்தையில் ஒன்றரை கோடி ரூபாய்க்கு வா்த்தகம்

கெங்கவல்லி அருகே உள்ள தெடாவூரில் சனிக்கிழமை நடைபெற்ற கால்நடை சந்தையில் ஒன்றரை கோடி ரூபாய்க்கு வா்த்தகம் நடைபெற்றது.ஆடிப்பெருக்கு விழாவையொட்டி, தெடாவூா் கால்நடை சந்தைக்கு 1,700-க்கும் மேற்பட்ட ஆடுகளை வ... மேலும் பார்க்க