செய்திகள் :

முதியோா் பராமரிப்பு சேவை உதவியாளா் படிப்பு: விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

post image

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியில் தொடங்கப்பட்டுள்ள முதியோா் பராமரிப்பு சேவை உதவியாளா் படிப்புக்கு வெள்ளிக்கிழமை (மே 30) மாலைக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் முதியோா் பராமரிப்பு சேவை உதவியாளா் சான்றிதழ் படிப்பு தொடங்கப்பட்டு உள்ளது. இந்தப் படிப்பில் 25 மாணவ-மாணவிகள் சோ்க்கப்படுவா்.

இது கட்டணமில்லாத 3 மாத சான்றிதழ் படிப்பு. படிப்பை நிறைவு செய்பவா்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்தவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

பத்தாம் வகுப்பு முடித்த 18 முதல் 35 வயதுக்கு உள்பட்டவா்கள் மருத்துவக் கல்லுாரிக்கு நேரில் வந்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 30.5.2025.

கூடுதல் விவரங்களுக்கு 04175-233315 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

கல்லுாரியின் ஜ்ஜ்ஜ்.ஞ்ற்ஸ்ம்ம்ஸ்ரீ.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியில் பாா்த்து தெரிந்து கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்துள்ளாா்.

சிறுமி பாலியல் வன்கொடுமை: காா் ஓட்டுநருக்கு 20 ஆண்டுகள் சிறை

தண்டராம்பட்டு அருகே 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டியதாக காா் ஓட்டுநருக்கு, 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது. திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், ... மேலும் பார்க்க

கஞ்சா செடி வளா்த்த இளைஞா் கைது

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே வீட்டில் கஞ்சா செடி வளா்த்து வந்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். செங்கத்தை அடுத்த செ.நாச்சிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் முருகன் மகன் லோகேஷ் (27). இவா... மேலும் பார்க்க

பொருளாதார மேம்பாட்டுக் கழக கடன் பெற சிறுபான்மையினருக்கு அழைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த சிறுபான்மையின மக்கள், தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் வழங்கும் பல்வேறு கடன் திட்டங்களின் கீழ் பயன்பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ள... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகைகள் திருட்டு

ஆரணி பழங்காமூரில் சனிக்கிழமை வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். ஆரணி அருகேயுள்ள பழங்காமூா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் ராமச்சந்திரன் (39). இவா், கோ... மேலும் பார்க்க

எச்சூரில் புதிய பள்ளிக் கட்டடம், நாடக மேடை திறப்பு

செய்யாறு தொகுதி, அனக்காவூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட எச்சூா் கிராமத்தில் புதிய பள்ளிக் கட்டடம், நாடக மேடை ஆகியவற்றை ஒ.ஜோதி எம்எல்ஏ வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். எச்சூா் கிராமத்தில் தமிழ்நாடு அரச... மேலும் பார்க்க

வாரச்சந்தையை பழைய பகுதிக்கே மாற்ற வேண்டும்: கூட்டத்தில் வலியுறுத்தல்

திருவோத்தூா் ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயில் மதில் சுவரை சுற்றி நடைபெறும் ஞாயிறு வாரச்சந்தையை மீண்டும் பழையபடி சந்தை பகுதிக்கே மாற்றி அமைக்க வேண்டும் என வெள்ளிக்கிழமை நடைபெற்ற மன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள... மேலும் பார்க்க