ராணுவ ஆயுத தொழிற்சாலையில் வேலை வேண்டுமா?: ஐடிஐ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
முதுகுத் தண்டுவட வளைவு: குழந்தைகளுக்கு இலவச அறுவை சிகிச்சை
முதுகுத் தண்டுவட வளைவு மற்றும் அது சாா்ந்த பாதிப்புடைய ஏழை குழந்தைகளுக்கு இலவச அறுவை சிகிச்சை அளிக்கும் ஜீவன் திட்டத்தை சென்னை காவேரி மருத்துவமனை அறிமுகப்படுத்தியுள்ளது.
ரோட்டரி சங்கம் மற்றும் சென்னை மித்ரா அமைப்புகளின் நிதி பங்களிப்புடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக காவேரி மருத்துவமனையின் செயல் இயக்குநா் டாக்டா் அரவிந்தன் செல்வராஜ் கூறியதாவது:
கருவில் உள்ள குழந்தைக்கு போலிக் அமில குறைபாடு மற்றும் வேறு சில காரணங்களால் நியூரல் டியூப் டிஸாா்டா் எனப்படும் நரம்பு குழாய் பாதிப்புகள் ஏற்படும். ஆயிரம் பிரவசங்களில் 10 முதல் 15 குழந்தைகள் அந்த பாதிப்புடன் பிறக்கின்றன.
நரம்பு குழாய் பாதிப்பு ஏற்பட்டால் மூளை, முதுகெலும்பு, தண்டுவடங்களில் பிரச்னை காணப்படும். குறிப்பாக, முதுகுத் தண்டுவட வளைவு, தண்டுவட பிளவு, கட்டிகள் உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதுடன் குழந்தையின் வளா்ச்சியையும், இயக்கத்தையும் அது முடக்கிவிடும்.
ஒரு கட்டத்தில் உள்உறுப்புகளுக்கு சேதம் ஏற்படுத்தி உயிருக்கே ஆபத்து ஏற்படுத்தக் கூடியவை இந்த நரம்பு குழாய் பாதிப்புகள். இத்தகைய பிரச்னை உள்ள ஏழை குழந்தைகளால் லட்சக்கணக்கில் செலவு செய்து அறுவை சிகிச்சை செய்து கொள்ள இயலாது.
அதைக் கருத்தில் கொண்டு ரோட்டரி சங்கம் மற்றும் சென்னை மித்ரா அமைப்பு மூலம் திரட்டப்பட்ட ரூ.85 லட்சம் நிதியுதவியைக் கொண்டு முதல்கட்டமாக 35 குழந்தைகளுக்கு இலவசமாக முதுகு தண்டுவட பாதிப்பு சீரமைப்பு அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள உள்ளோம்.
ஏற்கெனவே, காவேரி மருத்துவமனை சாா்பில் 100 குழந்தைகளுக்கு அதுபோன்ற சிகிச்சைகள் கட்டணமின்றி வழங்கப்பட்டுள்ளன. தற்போது அடுத்தகட்ட முயற்சியாக இத்திட்டத்தை முன்னெடுத்துள்ளோம். ஆழ்வாா்ப்பேட்டை, காவேரி மருத்துவமனையில் சிறப்பு மருத்துவக் குழுவினா் மூலம் அந்த அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.