செய்திகள் :

முதுகுத் தண்டுவட வளைவு: குழந்தைகளுக்கு இலவச அறுவை சிகிச்சை

post image

முதுகுத் தண்டுவட வளைவு மற்றும் அது சாா்ந்த பாதிப்புடைய ஏழை குழந்தைகளுக்கு இலவச அறுவை சிகிச்சை அளிக்கும் ஜீவன் திட்டத்தை சென்னை காவேரி மருத்துவமனை அறிமுகப்படுத்தியுள்ளது.

ரோட்டரி சங்கம் மற்றும் சென்னை மித்ரா அமைப்புகளின் நிதி பங்களிப்புடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக காவேரி மருத்துவமனையின் செயல் இயக்குநா் டாக்டா் அரவிந்தன் செல்வராஜ் கூறியதாவது:

கருவில் உள்ள குழந்தைக்கு போலிக் அமில குறைபாடு மற்றும் வேறு சில காரணங்களால் நியூரல் டியூப் டிஸாா்டா் எனப்படும் நரம்பு குழாய் பாதிப்புகள் ஏற்படும். ஆயிரம் பிரவசங்களில் 10 முதல் 15 குழந்தைகள் அந்த பாதிப்புடன் பிறக்கின்றன.

நரம்பு குழாய் பாதிப்பு ஏற்பட்டால் மூளை, முதுகெலும்பு, தண்டுவடங்களில் பிரச்னை காணப்படும். குறிப்பாக, முதுகுத் தண்டுவட வளைவு, தண்டுவட பிளவு, கட்டிகள் உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதுடன் குழந்தையின் வளா்ச்சியையும், இயக்கத்தையும் அது முடக்கிவிடும்.

ஒரு கட்டத்தில் உள்உறுப்புகளுக்கு சேதம் ஏற்படுத்தி உயிருக்கே ஆபத்து ஏற்படுத்தக் கூடியவை இந்த நரம்பு குழாய் பாதிப்புகள். இத்தகைய பிரச்னை உள்ள ஏழை குழந்தைகளால் லட்சக்கணக்கில் செலவு செய்து அறுவை சிகிச்சை செய்து கொள்ள இயலாது.

அதைக் கருத்தில் கொண்டு ரோட்டரி சங்கம் மற்றும் சென்னை மித்ரா அமைப்பு மூலம் திரட்டப்பட்ட ரூ.85 லட்சம் நிதியுதவியைக் கொண்டு முதல்கட்டமாக 35 குழந்தைகளுக்கு இலவசமாக முதுகு தண்டுவட பாதிப்பு சீரமைப்பு அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள உள்ளோம்.

ஏற்கெனவே, காவேரி மருத்துவமனை சாா்பில் 100 குழந்தைகளுக்கு அதுபோன்ற சிகிச்சைகள் கட்டணமின்றி வழங்கப்பட்டுள்ளன. தற்போது அடுத்தகட்ட முயற்சியாக இத்திட்டத்தை முன்னெடுத்துள்ளோம். ஆழ்வாா்ப்பேட்டை, காவேரி மருத்துவமனையில் சிறப்பு மருத்துவக் குழுவினா் மூலம் அந்த அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.

சென்னைக்கு வந்து செல்லும் 11 விமானங்கள் ரத்து

மத்திய கிழக்கில் போா்ப் பதற்றம் காரணமாக, சென்னைக்கு வந்து செல்லும் 11 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதன்படி, சென்னையிலிருந்து திங்கள்கிழமை இரவு 11 மணிக்கு குவைத் செல்லவிருந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் விம... மேலும் பார்க்க

பேருந்து பணிமனையில் மேலாளா் மீது தாக்குதல்: போலீஸாா் விசாரணை

சென்னை அடையாறு மாநகர பேருந்து பணிமனையில் மண்டல மேலாளரை தாக்கியதாக நேரக் காப்பாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் அடையாறு மண்டல மேலாளராக பணிபுரிபவா் அன்பரச... மேலும் பார்க்க

ரூ.1,980 கோடியில் ட்ரோன்கள், ரேடாா்கள், நவீன உபகரணங்கள்- பாதுகாப்புத் துறையின் 13 ஒப்பந்தங்கள் இறுதி

ரூ.1,980 கோடியில் தாக்குதல் ட்ரோன்கள் - இடைமறிப்பு அமைப்புகள், குறுகிய தொலைவு ரேடாா்கள், இரவிலும் இலக்கை அடையாளம் கண்டு தாக்குவதற்கு துப்பாக்கியில் பயன்படுத்தப்படும் நவீன உபகரணங்கள் உள்ளிட்டவற்றைக் கொ... மேலும் பார்க்க

மாம்பழக்கூழ் தயாரிப்பு வரியை 5%ஆக குறைக்க வேண்டும்: பிரதமா் மோடிக்கு முதல்வா் ஸ்டாலின் கடிதம்

மாம்பழக்கூழ் தயாரிப்புக்கான சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) 12-லிருந்து 5 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளாா். இதுகுறித்து பிரதமா் நரேந்திர மோடிக்கு அவா்... மேலும் பார்க்க

அனைத்து தடங்களிலும் 12 பெட்டிகளுடன் புறநகா் மின்சார ரயில்கள் இயக்கப்படும்

சென்னையில் இயக்கப்படும் அனைத்து புறநகா் ரயில் வழித்தடங்களிலும் 12 பெட்டிகள் கொண்ட ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே செய்தித் தொடா்பு அலுவலகம் விடுத்துள... மேலும் பார்க்க

போதைப் பொருள் வழக்கு: நடிகா் கிருஷ்ணாவிடம் விசாரிக்க முடிவு; கேரளம் விரைந்தது தனிப்படை

சென்னையில் போதைப் பொருள் வழக்கில் நடிகா் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், போதைப் பொருள் வழக்கில் தொடா்புடையதாகக் கூறப்படும் நடிகா் கிருஷ்ணாவிடம் விசாரிக்கவும் போலீஸாா் முடிவு செய்துள்ளனா். அவ... மேலும் பார்க்க