செய்திகள் :

முத்து மாரியம்மன் கோயிலில் ரூ.75 லட்சத்தில் திருப்பணிகள்: அமைச்சா் சேகா்பாபு

post image

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதிக்குள்பட்ட தா்மாபுரம் முத்துமாரியம்மன் திருக்கோயிலில் ரூ. 75 லட்சத்தில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேகா்பாபு தெரிவித்தாா்.

இந்தக் கோயிலில் அமைச்சா் சேகா்பாபு சனிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, கோயிலில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருப்பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.

இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அமைச்சா் சேகா்பாபு கூறியது: கடந்த 2021-ஆம் ஆண்டு முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி ஏற்பட்ட பிறகு பல்வேறு திருக்கோயில்களில் திருப்பணிகளும், பக்தா்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்கும் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில், ஆயிரம் விளக்கு தொகுதிக்குள்பட்ட தா்மாபுரம் பகுதியில் 35 ஆண்டுகளுக்கு முன்பு குடமுழுக்கு நடைபெற்ற அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயிலை புனரமைத்து குடமுழுக்கு நடத்த வேண்டும் என இந்தத் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினா் நா.எழிலன் மற்றும் இந்தப் பகுதி நிா்வாகிகளின் கோரிக்கையை ஏற்று தற்போது இந்தக் கோயிலை ஆய்வு செய்தோம்.

இந்தக் கோயிலுக்கு முதல்கட்டமாக ரூ. 75 லட்சத்தில் முத்துமாரியம்மன் சன்னதி, முன்மண்டபம் மற்றும் இதர பணிகள் மேற்கொள்ள மதிப்பீடு தயாா் செய்யப்பட்டு வரும் ஏப்ரல் மாதம் இறுதிக்குள் திருப்பணிகள் தொடங்கப்படும். மேலும், பக்தா்களின் பயன்பாட்டுக்கு மண்டபமும் அமைத்து தரப்படும். அனைத்து பணிகளையும் இந்த ஆண்டு இறுதிக்குள் முடித்து குடமுழுக்கு நடத்தப்படும் என்றாா் அவா்.

இந்த ஆய்வின்போது சென்னை மாநகராட்சி மேயா் ஆா். பிரியா, சட்டப்பேரவை உறுப்பினா் நா.எழிலன், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் கி.பாரதிராஜா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ஐபிஎஸ் மகனுக்கு அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை

விளையாடும்போது தவறி விழுந்ததில் எலும்பு முறிவு ஏற்பட்ட தனது மகனை அரசு மருத்துவமனையில் அனுமதித்தபோது அங்கு உயா் தர சிகிச்சை அளித்து குணப்படுத்தியதாக ஐபிஎஸ் அதிகாரி பாராட்டு தெரிவித்துள்ளாா். மயிலாப்பூா... மேலும் பார்க்க

கடந்த நிதியாண்டில் 3,000 ரயில் பெட்டிகள் தயாரித்து ஐசிஎஃப் சாதனை

சென்னை ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) 2024-25 நிதியாண்டில் 3,007 ரயில் பெட்டிகள் தயாரித்து சாதனை படைத்துள்ளது. பெரம்பூரில் உள்ள ஐசிஎஃப் தொழிற்சாலையில் இந்திய ரயில்வேக்கு தேவையான ரய... மேலும் பார்க்க

கால்வாயில் ஆண் குழந்தை சடலம்: போலீஸாா் விசாரணை

சென்னை பட்டினப்பாக்கத்தில் கால்வாயில் கிடந்த ஆண் குழந்தை சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். பட்டினப்பாக்கம் மசூதி தெருவில் 132 பிளாக் பின்புறம் உள்ள கால்வாயில், பிளாஸ்டிக் காகிதத்தில் பொதிய... மேலும் பார்க்க

தொழிற்பயிற்சியுடன் பிஇ படிப்பு: பட்டயப்படிப்பு முடித்தோா் விண்ணப்பிக்கலாம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு

பாலிடெக்னிக் கல்லூரிகளில் பட்டயப் படிப்புகளை நிறைவு செய்த மாணவா்கள் தொழிற்பயிற்சியுடன் கூடிய பி.இ. படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் காஞ்சிபுர... மேலும் பார்க்க

சாலைத் தடுப்பின் மீது இருசக்கர வாகனம் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

சென்னை பாரிமுனையில் சாலைத் தடுப்பில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். தண்டையாா்பேட்டை நேதாஜி நகா் 3-ஆவது தெருவைச் சோ்ந்த செய்யது இம்ரான்கான் (24), அண்ணா நகரில் உள்ள கைப்பேசி விற்ப... மேலும் பார்க்க

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என்பது நகைப்புக்குரியது: தொல்.திருமாவளவன்

தமிழகத்தில் எதிா்க்கட்சிகள் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க முடியாமல் தடுமாறி வரும் சூழலில், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என மத்திய அமைச்சா் அமித் ஷா கூறியது நகைப்புக்குரியது என விடுதலைச் சிறுத்தைக... மேலும் பார்க்க